நாங்கள் அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு அவரைப் பணிந்து கொள்ள வந்திருக்கிறோம் Tucson, Arizona, USA 63-1216 1இந்த மாலை வேளையில், இங்கு கூடியுள்ள அருமையான கிறிஸ்தவ ஜனங்களின் மத்தியில், நம்முடைய ஆசிர்வதிக்கப்பட்ட கர்த்தராகிய இயேசுவைப்பற்றி பேசுவதற்கு எனக்கு கிடைத்துள்ள இந்த தருணத்தை ஒரு பெரிய சிலாக்கியமாகக் கருதுகிறேன். நாம் அனைவரும் அவரைக் கனப்படுத்தவே இங்கு வந்துள்ளோம். டூசானிலும் பீனிக்ஸிலிமுள்ள முழு சுவிசேஷ வர்த்தகர் குழுக்களின் தலைவர்களான சகோ. டோனி, சகோ. வில்லியம்ஸ் ஆகியோருடன் கூட இங்குள்ளது அருமையானது. சென்ற சனிக்கிழமை காலை பீனிக்ஸில், அங்குள்ள ரமாதா சத்திரத்தில், ஒரு ஆராதனை நடத்தினோம். நிச்சயமாக அது ஒரு மகத்தான தருணமாயிருந்தது. இம்மாதம் பத்தொன்பதாம் தேதியிலிருந்து மீண்டும் ஒரு மகத்தான தருணத்தை அங்கு எதிர்பார்க்கிறோம். அங்கு தொடர்ச்சியாக நடைபெறவிருக்கும் ஆராதனையில் கலந்துகொள்ள நான் செல்லவிருப்பதை என் சிலாக்கியமாகக் கருதுகிறேன். பத்தொன்பதாம் தேதி தொடங்கி நான்கு இரவுகள் நமக்கு கூட்டங்கள் இருக்கும் என்று கேள்விப்படுகிறேன். வர்த்தகர்களின் சர்வதேச கன்வென்ஷன் இருபத்திரண்டாம், இருபத்தி மூன்றாம் தேதிகளில் தொடங்குகிறது என்று நினைக்கி றேன். அங்கு நான் இருபத்திரண்டாம் தேதி வரை இருப்பேன். அவர்களுடைய கன்வென்ஷனில் ஒன்று அல்லது இரண்டு இரவுகள் பிரசங்கிப்பேன் என்று எண்ணுகிறேன். எனவே நாட்டின் வெவ்வேறு பாகங்களிலுள்ள கிறிஸ்தவர்களுடன் ஒன்றுகூடி, கிறிஸ்துவைப் பற்றிய என்னுடைய உணர்வையும் அன்பையும் அவர்களுக்கு வெளிப்படுத்தி, அவர்களுடன் ஒருமித்து மகத்தான ஐக்கியம் கொள்ள கிடைக்கும் தருணத்தை, நான் சிறந்த சிலாக்கியமாகக் கருதுகிறேன். நீங்கள் அளித்த அருமையான உணவை அனுபவிக்க இங்கு நான் வராமல் போனதைக் குறித்து என் வருத்தத்தைத் தெரிவிக்கிறேன். ஆனால் நான் நினைக்கிறேன்.... 2நான் வெளியே சென்று ஜனங்களை சந்தித்து, வியாதியஸ்தர்களுக்காக ஜெபம் செய்து, பாதையில் யாருக்காகிலும் உதவி செய்ய முயன்றேன். நாம் வாழும் இந்த பழைய உலகம் வியாதியும் துன்பமும் நிறைந்துள்ளது. ஆனால் இவைகளின் மத்தியில், இவையனைத்துக்கும் மேலாக, இப்படிப்பட்ட நெருக்கங்களுக்கு அப்பால், நாம் நோக்கிப் பார்க்க ஒருவர் நமக்கிருக்கிறார் என்பது அற்புதமானதல்லவா? ஒரு உண்மையான கிறிஸ்துமஸ் இருந்திராவிடில் என்னவாயிருக்கும்? உண்மையான ஒரு கிறிஸ்துமஸ் இருந்திராவிடில், இன்றிரவு காரியங்கள் இருக்கிற விதமாக இருந்திருக்காது. கிறிஸ்துமஸை நாம் மறுபடியுமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதன் உண்மையான அர்த்தத்தை - அது கிறிஸ்துவின் பிறப்பு என்பதை நாம் மாற்றிவிட்டது மிகவும் மோசமாகும். சாண்டா கிளாஸ் என்னும் கிறிஸ்துமஸ் தாத்தா கிறிஸ்துமஸில் கிறிஸ்துவின் ஸ்தானத்தை எடுத்துக் கொண்டதாக தோன்றுகிறது. கிரிஸ் கிரிங்கில் என்பவர், முதுகில் விளையாட்டுப் பொருட்களை சுமந்தவராய், புகைபோக்கியின் வழியாய் இறங்கிவந்து, ஒரே இரவில் முழு உலகையும் சந்திப்பதாக ஒரு கட்டுக்கதை உள்ளது. அதைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ எனக்குத் தெரியாது. உங்கள் பிள்ளைகளுக்கு அந்த கதையைக் கூற விரும்பினால், அப்படியே செய்யுங்கள், ஆனால், ''பொய் சொல்லாதிருப்பாயாக'' (உபா. 5:20) என்று வேதத்தின் வாயிலாக நான் கற்பிக்கப்பட்டிருக்கிறேன். ஒரு நாள் அவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா என்ற ஒன்று கிடையாது என்பதை அறிந்து கொண்டு, ''கிறிஸ்துமஸ் தாத்தாவைப் போன்றே இயேசு கிறிஸ்துவும் ஒரு கட்டுக்கதையா?'' என்று உங்களைக் கேட்பார்கள். எனவே என்னைப் பொறுத்த வரையில், இதுவே நலமென்று நினைக்கிறேன். அது ஒருக்கால் உங்களுடைய கருத்தாக இல்லாமலிருக்கலாம். உங்களுடைய பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டுமென்று உங்களுக்கு நான் சொல்லிக் கொடுக்க வரவில்லை. ஆனால் நான்... நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள் என்று அவர்கள் கண்டு பிடித்தால், அப்பொழுது மற்றதும் கூட பொய்யாயிருக்கலாம் என்று ஒருநாள் அவர்கள் சொல்லிவிடுவார்கள். எனவே நீங்கள் அவர்களுக்கு வெளிப்படையாகவே உண்மையைக் கூறிவிடுங்கள். அப்பொழுது அவர்கள் நீங்கள் கூறுவதைப் புரிந்து கொள்வார்கள். வெளியே அவர்கள் செய்வது எவ்வளவோ மோசமாகத் தென்பட்டாலும், அது நம்மைத் தொல்லைப்படுத்தாமல், கிறிஸ்துமஸ் என்னவாயிருக்க வேண்டுமோ, அதை நாம் கடைபிடிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். பாருங்கள்? 3இருளில் தானே வெளிச்சம் அதிகமாக பிரகாசிக்கிறது என்று நினைக்கிறேன். இருள் அதிகமாகுந்தோறும், அது சிறு வெளிச்சமாயிருந்த போதிலும், கூடுதலாகப் பிரகாசிக்கிறது வெளிச்சம் அதிகமாக உள்ள இடத்தில் அது கவனிக்கப்படுவதில்லை. ஆனால் இருளாகும்போது, அந்த சிறு வெளிச்சம் அவ்வளவு அதிகமாக பிரகாசிக்கும். வெளிச்சத்தின் முன்னால் இருள் இருக்கமுடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருளைக் காட்டிலும் வெளிச்சம் அதிக பலமுள்ளதால், இருள் அதற்கு முன்னால் நிற்கமுடியாது. சூரியன் பிரகாசிக்கத் தொடங்கும்போது, இருள் நிற்கமுடியாது. ஏனெனில் சூரியன் - சூரியவெளிச்சம் - அதிக பிரகாசமுள்ளதால், அது இருளை விரட்டியடித்து விடுகின்றது. அது அங்கு இருக்காது. இந்த இருள் சூழ்ந்த உலகமும் ஒரு நாளில் எல்லாம் வெளிச்சமாகப் போகின்றது. நீதியின் சூரியனாகிய கிறிஸ்து மறுபடியும் வரும்போது, நமக்கு இருள் ஒருபோதும் இருக்காது. அது வரைக்கும், நாம் இரவு நேரத்தில் வெளியே நோக்கி, சந்திரன் பிரகாசிப்பதை காண்பது போன்று.... 4சந்திரனும் சூரியனும் மனைவியும் கணவனுமாவர் என்று கூறலாம். சூரியன் இல்லாதபோது, சந்திரன் பூமிக்கு சூரிய ஒளியைப் பிரதிபலித்து தருகிறது. அது சூரிய ஒளியைக்காட்டிலும் குறைவான ஒளியாயுள்ளது. சூரியன் எழும்பும் வரைக்கும், சந்திர ஒளியில் எப்படி நடமாடுவது என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும். சூரியனும் சந்திரனும் ஒன்றான பிறகு, சூரிய ஒளியும் சந்திர ஒளியும் எல்லாம் ஒன்றுதான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சபையும் அப்படித்தான் இருக்கவேண்டும். அவர் சரீரப் பிரகாரமாக பூமியில் இல்லாதிருக்கும் நேரத்தில், சபை அவருடைய வெளிச்சத்தைப் பிரதிபலித்து, இந்த இருள் நேரத்தில் அது இயேசு கிறிஸ்துவின் பிரதிபலித்தலாக விளங்கவேண்டும். கிறிஸ்துமஸ் தாத்தா, அலங்காரம் போன்றவைகளை நாம் தெருக்களில் காணும்போது, ''அது இயேசு கிறிஸ்துவின் பிறப்பேயன்றி, பரி. நிக்கோலாஸின் விஜயம் அல்ல'' என்று நாம் கூச்சலிடவேண்டும். நாம் பயங்கரமான இருள் சூழ்ந்த நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்பொழுது தான் நம்முடைய வெளிச்சம் உண்மையில் பிரகாசிக்கவேண்டும். 5இப்பொழுது, தேவனுடைய வார்த்தையை நாம் படிக்கும் முன்பு; நாம் அவருடைய வார்த்தையை கனப்படுத்தலாமா என்று எண்ணுகிறேன். அவருடைய வார்த்தையை நாம் எப்படி கனப்படுத்துகிறோம்? அதை படித்து, அதை விசுவாசிப்பதன் மூலமே நாம் அதை கனப்படுத்துகிறோம். அதை நாம் படிக்கவேண்டும். “விசுவாசம் கேள்வியினாலே (hearing - கேட்பதனால்) வரும்'' (ரோமர் 10:17). அதை படித்து அதை கனப்படுத்துவோமானால், நாம் படித்ததை விசுவாசிப்பதன் மூலம் அவரை கனப்படுத்துகிறோம். நாம் முதலாம் கனத்தை செலுத்துவதற்கு, நாம் அவருடைய வார்த்தையை படிக்கும்போது - வேதத்திலிருந்து ஒரு பாகத்தை நான் படிக்கும்போது - நாம் எழுந்து நிற்போம். அவருடைய வார்த்தையைப் படிக்கும்போது, அதற்கு கனத்தை செலுத்த நாம் சிறிது நேரம் எழுந்து நிற்கிறோம். அது பரி. மத்தேயுவில் உள்ளது - கிறிஸ்துமஸ் வரலாறு. பரி. மத்தேயு 2ம் அதிகாரத்தில் இதை நாம் வாசிக்கிறோம். ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்த பொழுது, கிழக்கிலிருந்த சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து: யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப்பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள். ஏரோது ராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடு கூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள். அவன் பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லாரையும் கூடி வரச்செய்து! கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று அவர்களிடத்தில் விசாரித்தான். அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அதேனென்றால்: யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல, என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள். அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக் குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து. மத் 2:1-7 6இந்த வார்த்தையின் ஆக்கியோனுடன் நாம் பேசும்போது, சற்று நேரம் நமது தலைகளை வணங்குவோம்: சர்வ வல்லமையுள்ள தேவனே, இந்தக் கடைசி நாட் களில் பரிசுத்த ஆவியின் மூலம் கிறிஸ்துவின் அன்பு எங்கள் இருதயங்களில் ஊற்றப்பட்டுள்ளதற்காக, எங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து இன்றிரவு உமக்கு நன்றி செலுத்துகிறோம். நாங்கள் ஒன்று கூடி உம்மைத் தொழுது கொள்ள எங்களுக்கு கிடைத்துள்ள சிலாக்கியத்திற்காகவும், என்றாவது ஒருநாள் உமது சபைக்காக நீர் வரப்போகிறீர் என்னும் உறுதியான நம்பிக்கையை நாங்கள் பெற்றுள்ளதற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இக்காலத்தில் நாங்கள் தீவட்டி பிடித்தவர்களாய், நாங்கள் வாழும் இக்காலத்திற்கென வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ள வார்த்தையை வெளிப்படுத்திக் காண்பிக்க இங்கு ஆயத்தமாயிருப்பதற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் தொடக்கத்திலேயே ஒவ்வொரு காலத்துக்கும் உமது வார்த்தையை பகிர்ந்தளித்து விட்டீர் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். ஒவ்வொரு காலத்தையும் நீர் தொடக்கத்திலிருந்து முடிவு வரை அறிந்தவராய், அந்த காலத்துக்கு உமது வார்த்தையை நீர் பகிர்ந்தளித்தீர். அது எப்படி நடந்ததென்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் உம்முடைய வார்த்தையை நாங்கள் பின்நோக்கி பார்க்கும்போது, காலங்கள் ஒவ்வொன்றிலும், உமது அபிஷேகம் வந்து, அந்த வார்த்தையை நிறைவேற்றினதை நாங்கள் காண்கிறோம். நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்நாட்களுக்காகவும், பகிர்ந்தளிக்கப்பட்ட வார்த்தை - இக்காலத்துக்கென அளிக்கப்பட்ட வாக்குத்தத்தம் - ஒன்றுள்ளது. பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது பூமியில் இருந்து கொண்டு இந்நாளுக்காகவும் இம்மணி நேரத்துக்காகவும் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ள வார்த்தையை வெளிப்படுத்தி, நிறைவேற்றி, அதை உறுதிப்படுத்த, இருதயங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். 7நாங்கள் பின்நோக்கி ஆயிரத்து தொளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பார்க்கும்போது, ஏதேன் தோட்டம் காலம் முதற்கொண்டு ஒரு இரட்சகர் வரப்போகிறார் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட வார்த்தையை, ஒருவர் வந்து தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தையையும் நிறைவேற்றினதைக் காண்கிறோம். அவருடைய வாழ்க்கை தேவனுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினது. ஏனெனில் அவரே வார்த்தையாயிருந்தார், தேவனுடைய பரிபூரணம் அவருக்குள் வாசமாயிருந்தது. தீர்க்கதரிசிகள் உரைத்த அனைத்திற்கும் அவர் பதிலாகவும், பரிபூரணமாகவும் திகழ்ந்தார். இன்றிரவு நாங்கள் மறுபடியும் அவருடைய பிறப்பின்று கொண்டாட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். கர்த்தாவே, எங்கள் தேசமும் கூட, யாரோ ஒருவரைக் குறித்து கூறப்பட்ட கட்டுக்கதையினால் தங்களை சுற்றிக் கொண்டுள்ளதைக் கண்டு வருந்துகிறோம். அது ஏதோ ஒரு கட்டுக்கதை, ஆனால், கர்த்தாவே, அது தவறென்றும், ஜீவிக்கிற உண்மையான தேவனிடமிருந்து ஜனங்களின் மனதைத் திருப்ப சத்துரு இதை செய்திருக்கிறான் என்றும் உண்மையான விசுவாசி எவனும் அறிந்திருக்கிறான் என்று நாங்கள் அறிவோம். 8தேவனே, நாங்கள் கிறிஸ்துமஸ் வரலாற்றை தியானிக்கும்போது, அவருடைய சமுகம் இன்றிரவு எங்களுடன் இருக்க வேண்டுமென்று ஜெபிக்கிறோம். கர்த்தராகிய இயேசுவே, அவரை இரட்சகராக ஏற்றுக் கொள்ளாத வர்த்தகர் அல்லது ஸ்திரீ யாராகிலும் இன்றிரவு இக்கட்டிடத்தில் இருக்க நேர்ந்தால், இன்றிரவே, தேவனுடைய மேசியாவும் புறக்கணிக்கப்பட்டு நிந்திக்கப்பட்ட வருமான இயேசுவை, அன்றுபோல் இன்று, தங்கள் சொந்த இருதயத்தை அவரைக் கிடத்தும் தொழுவமாக ஆக்கிக் கொள்ள அருள் புரிவீராக. இன்றிரவு அவர்கள் இவ்விடம் விட்டுச் செல்லும்போது, விடிவெள்ளி நட்சத்திரம் அவர்கள் மேல் தொங்கினவர்களாய் என்றாலும் ஒருநாள் இவருடைய வெளிச்சத்தின் மூலம் யோர்தானைக் கடக்கும் வரைக்கும், அவர்களுடைய பாதைக்கு வெளிச்சம் தரும்படி செய்வீராக. பிதாவே, இதை அருளும். இதை இயேசுவின் நாமத்திலும் அவருடைய மகிமைக்காகவும் கேட்கிறோம். ஆமென். (நீங்கள் உட்காரலாம்.) 9வழக்கமாக, நான் நீண்ட நேரம் பேசுவதுண்டு. என் தொண்டை கரகரப்பாயிருப்பதால், இன்றிரவு நான் பிரசங்கம் செய்யப் போவதில்லை. ஆனால் கிறிஸ்துமஸ் வரலாற்றைக் குறித்த ஒரு சிறு நாடகத்தை உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன். இதே வேத பாகம் வாசிக்கப்படுவதை நீங்கள் அநேகமுறை கேட்பீர்கள் என்பதில் ஐயமில்லை. அது வானொலியிலும் தொலை காட்சிகளிலும் வரும். உங்கள் சபைகளிலும், வர்த்தகராகிய உங்களுடைய உத்தமமான போதகர்கள் இந்த கிறிஸ்துமஸ் வரலாற்றைக் கூறுவதை நீங்கள் கேட்பீர்கள். இயேசு ஏன் பெத்லகேமில் பிறந்தார் என்று சென்ற சனிக்கிழமையன்று பீனிக்ஸிலுள்ள வர்த்தகர் சங்கத்தில் பிரசங்கித்தேன். அதைவிட சற்று வித்தியாசமாக இதை அணுக விரும்புகிறேன். அவர் பெத்லகேமைத் தவிர வேறெங்கும் பிறந்திருக்க முடியாது. பாருங்கள், ஏனெனில் அது அவருடைய நாமத்தையும் அவர் யாரென்பதையும் அறிவித்தது. பெத்லகேம் தேவனுடைய அப்பம் உள்ள வீடு என்று நாங்கள் வேதவாக்கியங்களின் மூலம் கண்டு கொண்டோம். அவரே தேவனுடைய ஜீவ அப்பம். அவர் வேறிடத்தில் பிறக்க வழியேயில்லை.... மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் பெத்லகேமில் பிறந்திருக்கிறோம் என்பதை அது நமக்கு அறிவுறுத்துகிறது. கிறிஸ்துவே தேவனின் பெத்லகேம், நித்திய ஜீவனின் அப்பம் உள்ள அவருடைய வீடு. 10இன்றிரவு இதை வித்தியாசமான வழியில் அணுகப் போகின்றோம். கர்த்தருக்கு சித்தமானால் இன்றிரவு, ''நாங்கள் அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு அவரைப் பணிந்து கொள்ள வந்திருக்கிறோம்'' என்னும் பொருளைத் தெரிந்து கொள்ளப் போகின்றேன். இந்த சாஸ்திரிகள். நம்மிடையே இப்படிப்பட்ட கருத்து நிலவி வருகின்றது, மூன்று சாஸ்திரிகள் இருந்ததாக பாரம்பரியம் நமக்கு கூறுகிறது. அது உண்மையாவென்று நமக்குத் தெரியாது. மூன்று பேர் இருந்ததாக வேதம் கூறவில்லை. அவர்கள் புறப்பட்டு வந்த இடமாகிய இந்தியாவில் ஊழியம் செய்ய எனக்கு சிலாக்கியம் கிடைத்தது. அவர்கள் மும்மூன்று பேராக பயணம் செய்கின்றனர். அதை இப்பொழுதும் நாம் காண்கிறோம். அண்மையில் நான் இந்தியாவில் இருந்தேன். அவர்கள் தலைப்பாகை அணிந்து ஒருவருடைய தலை மற்றவரின் தலையுடன் முட்டினாற்போல் சம்மளமிட்டு பகல் நேரத்தில் தெருவில் உட்கார்ந்துகொண்டு, ஒருவிதமான பகற்கனவு கண்டு கொண்டிருப்பார்கள். அவர்கள் நேராக உட்காரமாட்டார்கள், சம்மளமிட்டு உட்காருவார்கள். அவர்கள் மூவராக பிரயாணம் செய்யும் காரணத்தால்தான், மூன்று சாஸ்திரிகள் இருந்ததாக நாம் நம்புகிறோம் என்று நினைக்கிறேன். அவர்கள், ''கிழக்கில் அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்திருக்கிறோம்'' என்றனர். வேறு வார்த்தைகளில் கூறினால், ''இக்காலத்துக்குரிய அவருடைய அடையாளத்தை நாங்கள் கண்டோம்'' - அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலம். அது அவ்வாறு தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருந்தது. 11பாருங்கள், தேவனுடைய வார்த்தை நித்தியமானது என்று நான் விசுவாசிக்கிறேன். ஏனெனில் “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது, அந்த வார்த்தை மாம்சமாகி நம்மிடையே வாசம் பண்ணினார்.'' எனவே, வார்த்தையை ஒருபோதும் மாற்ற முடியாது. அது நித்தியமானது. அது தேவனே அச்சிட்ட வடிவில் வேதாகமமாக, தேவனுடைய வார்த்தையாக இருப்பதாகும். அவர் ஏதாவது ஒரு நிர்ணயத்தை (standard) கொண்டே சபையை நியாயந்தீர்க்க வேண்டும். நாம் ஏற்படுத்திக் கொண்டுள்ள முறமைகளின் நிர்ணயத்தின் அடிப்படையில் அவர் நியாயந்தீர்க்க முடியாது. ஏனெனில் நமது முறமைகள் ஒவ்வொன்றும் மனிதனால் உண்டாக்கப்பட்டவை. நீங்கள் நியாந்தீர்க்கப்பட வேண்டும். நீங்கள் இணங்காமல், “இல்லை, சகோ. பிரான்ஹாமே, நீங்கள் அங்கு தவறு செய்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். எங்களுடையது மாத்திரமே'' என்று கூறுகிறீர்கள். வேறொருவர் ''எங்களுடையது மாத்திரமே'' என்கிறார். அப்படியானால் யாருடையது சரி? ஏறக்குறைய தொளாயிரம் வெவ்வேறு முறமைகள் உள்ளனவே! எனவே வித்தியாச பேதங்களைக் கொண்ட இந்த தொளாயிரம் வெவ்வேறு முறமைகளைக் கொண்டு தேவன் சபையை நியாயந்தீர்க்க முடியாது. ஆனால் ஒருவர் இருப்பார். அவர் உலகத்தை கிறிஸ்துவைக் கொண்டு - இயேசு கிறிஸ்துவைக் கொண்டு - நியாயந்தீர்க்கப் போவதாக கூறியுள்ளார். கிறிஸ்து வார்த்தை. எனவே நாம் தேவனுடைய வார்த்தையைக் கொண்டு நியாந்தீர்க்கப்படுவோம். 12தேவன் ஒரு அடையாளத்தை முதலில் காண்பிக்காமல் எதையும் செய்வதில்லை. ஒரு அடையாளத்தைக் கொண்டு பிரகடனம் செய்யாமல் ஒரு காரியத்தை செய்த குற்றத்தை அவர் புரிந்ததில்லை. இந்த சாஸ்திரிகள், “கிழக்கில் அவருடைய நட்சத்திரத்தைக் கண்டோம்'' என்றனர். அதைக் கண்டபோது அவர்கள் கிழக்கில் இருந்தனர். அது பாபிலோன், அது எருசலேமுக்குக் கிழக்கில் உள்ளது. இரண்டு வருடங்கள் கழித்து அவர்கள் மேற்கை அடைந்து, ”அவரைப் பணிந்து கொள்ள வந்திருக்கிறோம்'' என்றனர். சாஸ்திரிகள் தொழுவத்தில் கிடந்த சிறு குழந்தையினிடம் வந்தனர் என்று கிறிஸ்துவ பாரம்பரியம் நம்மிடம் கூறுகின்றது. அது அப்படியல்ல. வேதம் அங்கு முரணாயுள்ளது. ''அவர்கள் பிள்ளையிடம் வந்தார்கள்'' (ஆங்கிலத்தில் young child - மத்2:9) என்று தான் வேதம் கூறுகின்றது. - பாலகனிடம் அல்ல. இரண்டு வயதுக்குட்பட்ட பிள்ளைகள் அனைவரையும் ஏரோது கொன்று போட்டான். பாருங்கள், அவர்கள் அந்த இடத்தை அடைய எங்கிருந்து ஓட்டகத்தின் மேல் பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது என்று கவனியுங்கள். அவர்கள் டைகிரீஸ் நதியைக் கடந்து பிரயாணம் செய்து அங்கு வந்து சேர இவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் பிடித்தது. அவர்கள் கிழக்கிலிருந்தபோது, “அவருடைய நட்சத்திரத்தைக் கண்டோம்,'' ”அவரைப் பணிந்து கொள்ள மேற்குக்கு வந்திருக்கிறோம்''. 13இப்பொழுது கவனியுங்கள். கிறிஸ்துமஸ் இப்பொழுது மாறிவிட்டது. உண்மையான கிறிஸ்துமஸ் தினம், நாம் - அது விவாதத்துக்குரியதாகி விட்டது. ஏனெனில் அது நமக்குத் தெரியாது. இப்போது நாம் கிறிஸ்துமஸை அனுசரிக்கும் நாள், அதை நீங்கள் கவனிப்பீர்களானால், கிறிஸ்துமஸ் தினம் எப்பொழுது என்று ரோமன் கத்தோலிக்க சபை கொண்டுள்ள கருத்தையே நாம் எடுத்துக் கொண்டுள்ளோம். உண்மையில் கிறிஸ்து, வேத ஆதாரத்தின்படி, டிசம்பர் இருபத்தைந்தாம் தேதி பிறந்திருக்க முடியாது. ஏனெனில் அந்த நேரத்தில் யூதேயாவில் முப்பது அடி உயரத்துக்கு பனி குவிந்திருக்கும், பாருங்கள், எனவே அவர்கள்.... மேய்ப்பர்கள் மலையின் மேல் இருந்திருக்க முடியாது. அது இயற் கைக்கு முரணாயிருக்கும். அவர் இயற்கையின் விதிகளின்படியே வந்தார். ஏனெனில் தேவனுக்கு ஒரு பிரமாணம் உண்டு, அந்த பிரமாணங்களை மாற்றமுடியாது. சூரியன்மறைகின்றது. ''நல்லது, அது மறுபடியும் உதிக்காது'' என்று நீங்கள் சொல்ல முடியாது, கோடைகாலம், குளிர்காலம் முதலானவை, தேவன் அவைகளை தமது பிரமாணத்தின்படி ஒழுங்குபடுத்தியுள்ளார். அவை ஒவ்வொன்றும் பிழையின்றி இயங்குகின்றன. 14ஒருக்கால் அவர் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பிறந்திருப்பார். அவர் ஆட்டுக்குட்டி. மற்றெல்லாமே அவர் ஆட்டுக் குட்டியானவராக இருப்பார் என்பதை நிரூபித்தன. அதனால்தான் அவர் தொழுவத்தில் பிறந்தார், வைக்கோல் குவியலில் பிறந்ததார். அவர் வீட்டில் பிறக்கவில்லை. ஏனெனில் ஆட்டுக்குட்டிகள் வெளியே வைக்கோல் குவியல் இருக்கும் இடத்தில் பிறக்குமேயன்றி, வீட்டில் அல்ல. சிலுவையிலறையப்பட கொண்டு போகப்பட்டபோது, அவர் வழிநடத்தப்பட்டார். நீங்கள் செம்மறியாடுகளை வழிநடத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இங்குள்ள ஆடுகள் வெட்டும் இடத்திற்கு நாம் சென்றால், செம்மறியாடுகளை வழிநடத்த வெள்ளாடு ஒன்றை அவர்கள் வைத்துள்ளனர். செம்மறியாடு தானாகவே செல்லாது. அது வழிநடத்தப்பட வேண்டும். எல்லா வகையிலும் அவர் இயற்கைக்கு ஒத்ததாக அமைந்திருந்தார். எனவே அவர் ஆட்டுக்குட்டிகள் பிறக்கும் காலத்தில்தான் பிறந்திருக்க வேண்டும். அது ஏப்ரல் மாதத்தில். பாருங்கள், அந்த சமயத்தில்தான் அவர் பிறந்தார். 15ஆனால் கிறிஸ்தவ மார்க்கம் ரோம மார்க்கத்துக்குள் கொண்டு வரப்பட்டு, நிசாயாவில் அது கலக்கப்பட்டபோது, அவர்கள் ஜீபிடரை சூரிய தேவனாக வழிபட்டு வந்தனர். அது ரோமாபுரியின் சூரிய தேவன் (Sun god). அவனுடைய பிறந்தநாள்... ஏறக்குறைய டிசம்பர் இருபத்தைந்தாம் தேதி. ஏனெனில் சூரிய தேவனின் பிறந்தநாள் கொண்டாட்டம் டிசம்பர் இருபத்தொன்றாம் தேதி தொடங்கி, இருபத்தைந்தாம் தேதி வரைக்கும் நீடித்தது. எனவே ரோம அஞ்ஞான மார்க்கத்தை கிறிஸ்தவ மார்க்கத்துடன் இணைத்தபோது, அவர்கள், “அதை நாம் தேவனுடைய குமாரனின் (Son of God) பிறந்தநாளாகச் செய்து விடுவோம். அப்பொழுது அந்த விஷயத்தில் நாம் எல்லோரும் ஒத்துப் போய்விடலாம்'' என்றனர். பாருங்கள், ஒவ்வொரு முறையும், அவை சத்தியத்துக்கு விரோதமாக ஒப்புரவாகும் திட்டங்களாகவே அமைந்து வந்துள்ளன. அது எப்பொழுதுமே அவ்வாறு இருந்து வந்துள்ளது. 16எனவே அவர்கள் எல்லாவற்றையும் நுழைத்து விட்டதை இன்று காண்கிறோம். நமது பரிசுத்த நாட்கள் அனைத்துமே கறைபட்டு விட்டன. நமது ஈஸ்டர், இப்பொழுது கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலாக இல்லாமல் ஏதோ ஒரு ஈஸ்டர் முயல், அல்லது ஒரு புது தொப்பி, அல்லது வேறெதாகிலும் ஒன்று, அல்லது சிறு இளஞ்சிவப்பு வாத்து போன்றதாக உள்ளது. எவ்வாறு கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கும் கிறிஸ்துவின் பிறப்புக்கும் சம்பந்தமில்லையோ, அதுபோன்று இவைகளுக்கும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கும் சம்பந்தமில்லை. ஆனால் அது உலக சம்பந்தமாகி விட்டது! வர்த்தக உலகம் இவைகளை எல்லாவிதமான சிக்கல்களுக்கும் குழப்பத்திற்கும் ஆளாக்கிவிட்டது. தேவன் இதை சுட்டெரிக்கப் போகிறார் என்பது நியாயமான செயலே. அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவர் அதை செய்யப்போகிறார், அப்படி செய்யப் போவதாக அவர் வாக்களித்துள்ளார். அவர் சுட்டெரிப்பதற்காக அது குழப்பத்திற்கு ஆளாகத்தான் வேண்டும். அதற்கு எல்வித நம்பிக்கையுமில்லை, அது முடிந்துவிட்டது. எனவே இப்பொழுது, நான் கூறினவிதமாக, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த அந்தகார நேரத்தில், கிறிஸ்தவர்கள் அந்த வெளிச்சத்தைப் பிடித்துக் கொண்டு, கிறிஸ்துமஸில் சத்தியம் உண்டு, அது தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பாயுள்ளது என்பதை தெரியப்படுத்த வேண்டும். கரு மேகம் கொண்ட கோபமுள்ள வானத்தில் தோன்றும் நெளிந்து வளையும் மின்னல். இருளிலும் வெளிச்சம் இருக்க முடியும் என்பதை காண்பிக்கிறது. அந்தகார நேரத்தில் வெளிச்சம் இருக்கமுடியும் என்பதை அது நிரூபிக்கின்றது, 17இன்றிரவு நான் பேசப்போவது சற்று வழக்கத்திற்கு மாறாக காணப்படலாம். முக்கியமாக நான் எழுதி வைத்துள்ள குறிப்புகளையும் வேத வாக்கியங்களையும் என் பிரசங்கத்தின்போது எடுத்துக்கூறுவேன், ஏனெனில் அநேகர் வேதவாக்கியங்களை குறித்துக் கொள்கின்றனர். இது சற்று வழக்கத்துக்கு மாறானதாயிருக்கும். ஆனால் ஒன்றை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்: தேவன் வழக்கத்துக்கு மாறானவர், அவர் வழக்கத்துக்கு மாறான காரியங்களைச் செய்கிறார். இன்று நம்மிடமுள்ள தொல்லை என்னவெனில், நாம் வழக்கமான காரியங்களிலே அதிகமாக ஈடுபட்டுள்ள காரணத்தால், வழக்கத்துக்கு மாறான ஏதாகிலும் ஒன்று நடக்கும்போது, நாம் இதற்கு புறம்பே இருப்பதால், என்ன நடந்தது என்பதை அறியாமலிருக்கிறோம், தேவன் வழக்கத்துக்கு மாறானவைகளைச் செய்கிறார். வேதாகமம் படித்துள்ள எந்த மனிதனும் தேவன் எப்பொழுதுமே வழக்கத்துக்கு மாறானதைச் செய்கிறார் என்பதை அறிவான். இதை ஞாபகம் கொள்ளுங்கள். அவருடைய குமாரனின் பிறப்பை தேவனே முன்கூட்டி ஒழுங்கு செய்திருந்தார். அது நிகழும்போது, அது எப்பொழுது நிகழவேண்டும், எப்படி நிகழவேண்டும். என்றெல்லாம் முன்கூட்டியே தேவனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. 18இதை கவனித்தீர்களா, அவருடைய பிறப்பு, கொலையாளி ராஜாவாகிய ஏரோதின் காலத்தில் நிகழவேண்டுமென்று குறிக்கப்பட்டிருந்தது. அவன் கொலைகாரனேயன்றி வேறொன்றுமில்லை. அவன் எல்லா பிள்ளைகளையும் கொன்று போட்டான், கர்த்தர் தீர்க்கதரிசியின் மூலமாய் உரைத்த, ''ராமாவிலே ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியில் ஆறுதலடையாதிருக்கிறாள்'' (மத் 2:17) என்பது நிறைவேறும்படியாக இப்படி நடந்தது. பாருங்கள், நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனம் நிறைவேறுவதற்காக ஒரு கொலையாளி ராஜா இருக்க வேண்டியது அவசியமாயிருந்தது. தேவன் தமது தீர்க்கதரிசியின் மூலம் ஒரு வார்த்தை பேசும்போது, அது தேவனுடைய வார்த்தையாயிருக்குமானால் நிறைவேறியே ஆகவேண்டும். அது எவ்வளவு காலம் தாமதமானாலும் கவலையில்லை. அது நிறைவேறியே தீரும். ஏனெனில் அது ஒரு வித்து. தேவனுடைய வார்த்தை, விதைக்கிறவன் விதைக்கும் விதையாயுள்ளது என்று இயேசு கூறினார். (மத். 13:24). எனவே அது தன் காலத்தில் தன் கனியைக் கொடுக்க வேண்டும். அந்த பிள்ளைகளைக் கொல்வதற்கு கொலையாளி ராஜா ஒருவன் அந்த காலத்தில் இருந்தாக வேண்டும். 19வேறொரு காரியத்தை நாம் கவனிக்க வேண்டும். அந்த சமயத்தில் அவன் ஜனங்களின் மேல் வரி சுமத்தினதால், அது யோசேப்பையும் அவனுடைய மனைவியையும் (அவனுக்கு மனைவியாக நியமிக்கப்பட்ட மரியாளை) பெத்லகேமுக்கு வலுக்கட்டாயமாக கொண்டு சென்றது, காரியங்களை எப்படி செய்ய வேண்டுமென்று தேவன் அறிவார். சத்துருவின் கிரியைகளும் கூட அவரைத் துதிக்கும்படிக்கு அவர் செய்வார். கடிகாரம் சரியாக அடிக்க, “நாம் இதை செய்யவேண்டும், அதை செய்யவேண்டும்'' என்று சில சமயங்களில் நாம் எண்ணுவதுண்டு. தேவனுடைய கடிகாரம் பிழையின்றி இயங்கிக் கொண்டிருக்கிறது. இயேசு சரியான நேரத்தில் இங்கு இருப்பார். அவர் ஒரு வினாடி கூட தாமதிக்க மாட்டார். தேவன் கூறின அதேவிதமாக எல்லாம் நிகழும். எனவே நாம் செய்தாலும், செய்யாமல் போனாலும், அது எப்படியாயினும் இங்கிருக்கும். ஏனெனில் தேவன் அதை உரைத்தார், அது நிறைவேறும். 20நாம் காண்கிறோம், இந்த வரிகள்; தங்கள் பிறப்பிடத்திலிருந்து வெளியே சென்றுள்ள அனைவரும் திரும்பி வரவேண்டுமென்று ஏரோது உத்தரவிட்டான். அவன் ஏதோ பெரிய காரியத்தை செய்து விட்டதாக மனதில் எண்ணினான்; யேகோவாவுடன் இசைந்து அவன் செயல்படுகிறான் என்பதை அவன் அறியவில்லை. எத்தனை ஆசாரியர்கள் அந்த சமயத்தில் ஏரோதை கர்த்தரின் நாமத்தில் சபித்திருப்பார்கள்! எத்தனை பேர் இரகசியமாக, ''ஓ, இந்த ரோமன்...'' என்று அவனை திட்டியிருப்பார்கள்! “அவன் மாத்திரம் எங்கள் கைகளில் கிடைத்தால், நாங்கள் இன்னின்னதை செய்வோம்,'' அது தேவனுடைய திட்டத்தின்படி பிழையின்றி செயல்படுகிறது என்பதை அவர்கள் அறியவில்லை. இன்று நாம் கம்யூனிஸத்தையும் மற்றவைகளையும் சபிக்கிறோம். அது சபிக்கப்படுவதற்கு தகுதியானது தான் என்று எண்ணுகிறேன். ஆனால் நீங்கள் உண்மையை அறிவீர்களானால், அது தேவனுடைய கரத்தில் செயல்பட்டு. அது என்ன செய்யவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதை பிழையின்றி செய்து வருகின்றது. பாபிலோனை பூமியிலிருந்து அகற்ற, அவர் ஒன்றை எழுப்பவேண்டும். அதற்காக அவர் கருவியை தமது கரங்களில் கொண்டிருக்கிறார். வேதத்தை படித்து பாருங்கள், அவர் என்ன செய்யப்போகிறார் என்று கூறினது அதில் எழுதப்பட்டுள்ளது. அந்த காலத்திலிருந்த போதகர்கள் மாத்திரம் தேவனுடைய வார்த்தையை ஆராய்ந்து படித்திருந்தால், அது நிகழவேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள். 21இந்த வரிசெலுத்தும் விஷயத்தில், எல்லா ஜனங்களும் தங்கள் பிறப்பிடத்திற்கு எப்படியாயினும் திரும்ப வேண்டுமென்று ராஜா கட்டளையிட்டான் என்று நாம் பார்க்கிறோம். அது பயங்கரமான காரியமாக தோன்றினது. இந்த எளிய சிறு பெண், குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டு, அவள் வாழ்ந்து கொண்டிருந்த இடத்திலிருந்து நீண்ட பிரயாணம் செய்யவேண்டியிருந்தது. இன்றைக்கு, அந்நிலையிலிருந்த அவளை நோயாளி வாகனத்தில் கொண்டு செல்லவும் கூட நாம் யோசிப்போம். அவளோ பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது. நீங்கள் எப்பொழுதாவது பாலஸ்தீனாவுக்குச் சென்றிருந்தால், அவள் ஒரு சிறு கோவேறு கழுதையின் மேலேறி சென்ற பாதை கரடு முரடானதும், கற்பாறை குண்டுகள் (boulders), நிறைந்ததுமாயிருந்தது என்பதை கண்டிருப்பீர்கள். அது எவ்வளவு மோசமாகவும், கொடூரமாகவும் தென்பட்ட போதிலும், அது ராஜாவின் கட்டளை. அது வாலிபரானாலும், வயோதிபரானாலும், ஆயத்தமாயிருந்தாலும், ஆயத்தமாயில்லாமல் போனாலும், எப்படியாயினும் எல்லோருமே அதைக் கைக்கொண்டு பிரயாணம் செய்யவேண்டும். 22இதை நான் புகுத்த விரும்புகிறேன். சில நேரங்களில் நாம், நமது பாடுகள் மிகவும் பாரமாயுள்ளதென்றும், அதைப்போன்ற வேறொன்று உலகிலே இல்லை என்றும் கருதுகிறோம். இவையாவும் உங்கள் நன்மைக்கென்றே என்பது உங்களுக்குத் தெரியுமா? இவை யாவும் உங்களை வார்ப்பித்து, சீராக்குவதற்கென்றே. தீர்க்கதரிசிகளும், ஞானிகளும், பாலைவனத்தில் பயங்கரமான சூரிய உஷ்ணத்தில், உபத்திரவங்கள், சோதனைகள், துன்புறுத்தல்கள் முதலானவைகளின் மூலம் வார்ப்பிக்கப்பட்டு உருவாக்கப்பட்டனர். இன்று நமக்குள்ள பாடுகள்; மற்ற கிறிஸ்தவர்களுக்கு முன்பு நேரிடாதது ஒன்றும் நமக்கு நேரிடவில்லை. மற்ற கிறிஸ்தவர்களும் இதைப்போன்ற அந்தகார நேரத்தில் உறுதியாய் நிற்க வேண்டியதாயிருந்தது. அவர்கள் தங்கள் சாட்சியின் நிமித்தம் சிங்கங்களுக்கும் கூட இரையாக்கப்பட்டனர். 23நாம் சற்று கெளரவமுடையவர்களாய், நம்மை பெரிதாக நினைத்துக் கொண்டு, “நல்லது! நல்லது, நான் இன்னின்னதை சேர்ந்தவன். இந்த குறிப்பிட்ட சபையைச் சேர்ந்தவன். நான் இதைச் செய்தால்... அதற்கு நிந்தையை கொண்டு வந்து விடுவேனோ என்று பயப்படுகிறேன்'' என்கிறோம். இயேசு கிறிஸ்துவுக்காக நீங்கள் கொண்டுள்ள சாட்சியைக் குறித்து பயப்படாதீர்கள்! உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கச் செய்யுங்கள் ''அவரே தேவனுடைய குமாரன். கிரிஸ் கிரிங்கில் என்னும் கிறிஸ்துமஸ் தாத்தா விஜயம் செய்யும் இரவையல்ல, இயேசு கிறிஸ்துவின் பிறப்பையே நாங்கள் கொண்டாடுகிறோம்'' என்னும் உங்கள் திடநம்பிக்கையில் உறுதியாய் நில்லுங்கள். பாருங்கள்! இப்படிப்பட்ட காரியங்கள் செயல்படுகிறதை நாம் காண்கிறோம். 24ஒரு ஆலயத்தில் மணி அடிப்பதற்காக, பிரபலமான ஆலய மணி ஒன்று ஒரு குறிப்பிட்ட ஒலியை எழுப்புவதற்காக, அவர்கள் அதை வார்ப்பித்து உண்டாக்குவதை நீங்கள் எப்பொழுதாவது கண்டதுண்டா? ஒவ்வொரு மணியும் ஒரு குறிப்பிட்ட ஒலியை எழுப்புகிறது என்பதை நீங்கள் ஆலய மணி அடிக்கும்போது காணலாம், அதை சில பொருட்களை கலந்து வார்க்க வேண்டும் - இவ்வளவு பித்தளை, இவ்வளவு இரும்பு, இவ்வளவு மற்ற கனிமப் பொருட்கள் என்னும் சலவை அந்த மணியில் செல்லவேண்டும். அது வெறும் பித்தளையை உபயோகித்து வார்ப்பிக்கப்பட்டால், அது சரியாக ஒலிக்காது. அது சரியான ஒலியை எழுப்ப, எல்லாவிதமான பொருட்களால் அது வார்ப்பிக்கப்பட வேண்டும். அதை வார்ப்பதற்காக, வார்ப்பை ஆயத்தம் பண்ணினவன், வார்ப்பு உருக்கியில் (cupola) என்னென்ன உலோகங்களைக் கலந்து உருக்கி வார்த்தால், அந்த மணி அந்த குறிப்பிட்ட ஒலியை எழுப்பும் என்பதை அறிந்துள்ளான். 25தேவனே நமது மகத்தான வார்ப்பு உருக்கி. அவரே புடமிடுபவரின் எரிகிற சூளையாவார். அவர் இப்படிப்பட்ட சோதனைகளையும் உபத்திரவங்களையும் நம்மேல் கொண்டு வந்து, நம்மை உருக்கி வார்த்து, நமது சாட்சியானது ஒரு குறிப்பிட்ட காலத்தில், அவர் விரும்பும் ஒரு குறிப்பிட்ட தொனியை ஒலிக்கச் செய்கிறார். நாம் வித்தியாசமானவர்களாக உண்டாக்கப்பட்டிருக்கிறோம். நாம் அனைவருமே வித்தியாசமானவர்களாக உண்டாக்கப்பட்டிருக்கிறோம். நாம் வித்தியாசமாக காண்கிறோம். ஆனால் நாம் அனைவருமே ஒன்றை காண்கிறோம். அதுதான் இயேசு கிறிஸ்து. அவரை நாம் நோக்கிப் பார்ப்போம். அவரை நீங்கள் காணக்கூடிய ஒரே வழி.... அவர் இந்த வார்த்தைக்கு முரணாக உங்களுக்கு காணப்பட்டால், நீங்கள் அவரைப் பார்க்கவில்லை, ஏனெனில் அவர் தான் வார்த்தை நீங்கள் ஒரு கோட்பாட்டையோ அல்லது ஒரு ஸ்தாபனத்தையோ நோக்கிப் பார்த்து, ''நான் அதை சேர்ந்தவன், அது போதும்'' என்று நினைக்கலாம். அது வார்த்தையை நோக்கிப் பார்க்காவிட்டால், அதனின்று உங்கள் பார்வையை திருப்பி, வார்த்தையை நோக்கிப்பாருங்கள். அதை தான் நாம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம் - தேவனுடைய வார்த்தை வெளிப்படுபவராகிய கிறிஸ்துவை. அவரே தேவனுடைய வார்த்தையின் உறுதிப்படுத்தலாக இருக்கிறார். 26இந்த சிறு தம்பதிகளுக்கு, இந்த மகத்தான காரியங்கள் அனைத்தும் சம்பவித்தன. அது வினோதமாகத் தோன்றலாம், அவர்களுக்கு அது வினோதமாக தோன்றியிருக்கலாம். ஆனால் அவையாவும் நன்மைக்கேதுவாகவே கிரியை செய்தன. இப்பொழுது யோசேப்பு கண்ட சொப்பனத்தைக் குறித்து சிறிது நேரம் பேச விரும்புகிறேன். அதற்கான வேதவாக்கியங்களை இங்கு குறித்து வைத்துள்ளேன். தேவன், எல்லா சமயங்களிலும், எல்லா காலங்களிலும் அவருடைய ஜனங்களுடன் பேசி, அவரை சொப்பனங்களின் மூலமாக வெளிப்படுத்தி வந்திருக்கிறார். இப்பொழுது, சொப்பனங்கள் நிச்சயமுடையவைகள் அல்ல. எல்லா சொப்பனங்களுமே தேவனிடமிருந்து வந்தவை அல்ல. அநேகர் சொப்பனங்களைக் காண்கின்றனர். அவர்களுக்கு விதவிதமான சொப்பனங்கள் உண்டாகின்றன. நீங்கள் வயிறு புடைக்க இரவு உணவு உண்டு விட்டு படுக்கைக்கு சென்றால் நீங்கள் எதை வேண்டுமானாலும் சொப்பனம் காணலாம். உங்களுக்கு ஜூரம் ஏற்பட்டு, அதன் விளைவாக எல்லாவிதமான தீய கனவுகளைக் காணலாம், அது தேவனால் உண்டானதல்ல. ஆயினும் தேவன் சொப்பனங்களின் மூலம் ஜனங்களுடன் தொடர்பு கொள்கிறார். 27நாம் யாக்கோபின் குமாரனாகிய யோசேப்பை துவக்கத்தில் காண்கிறோம் - அவன் எவ்வாறு ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான் என்று. ஒரு தீர்க்கதரிசி சொப்பனங்களின் அர்த்தத்தை புரிந்து கொள்வான். சொப்பனத்திற்கு அர்த்தம் உரைக்கப்பட்டால், அது தரிசனமாகி விடுகிறது. அது தீர்க்கதரிசனம். அதற்கு முன்பு இராஜாவாகிய நெபுகாத்நேச்சார், தானியேல் இவர்களின் காலத்திலும், முன்காலங்களிலும், தேவன் ஜனங்களுடன் சொப்பனங்களின் மூலம் - ஆவிக்குரிய சொப்பனங்களின் மூலம் - தொடர்பு கொண்டாரென்று நாம் காண்கிறோம். எனக்கு அவைகளில் நம்பிக்கையுண்டு. அவைகளை இப்பொழுதும் நாம் பெற்றுள்ளோம். எத்தனையோ முறை, நூற்றுக்கணக்கானவர்கள் கண்ட சொப்பனங்களுக்கு சரியான அர்த்தம் உரைக்கப்பட்டு, அவை பிழையின்றி நிறைவேறியுள்ளன என்று என்னால் சாட்சி கூறமுடியும். 28ஆனால் சொப்பனம் என்பது ஒருவிதமான கட்டுக் கதையைப் போன்றது. ஒருமுறை மருத்துவ பரிசோதனையின் போது, சொப்பனங்களைக் குறித்து என்னிடம் கேட்கப்பட்டது. நீங்கள் உள் நினைவில் (Sub conscience) உள்ளபோது, சொப்பனம் காண்கிறீர்கள் என்று நமக்கு கூறப்படுகிறது ஒரு நபருக்கு சுயநினைவு உள்ளது. இந்த சுயநினைவில் உங்கள் ஐம்புலன்கள் - பார்த்தல், ருசிபார்த்தல், உணருதல், முகர்தல், கேட்டல் என்பவை - தீவிரமாக வேலை செய்கின்றன. ஆனால் நீங்கள் உறங்கச் செல்லும்போது, இந்த ஐம்புலன்களும் வேலை செய்வதில்லை. அப்பொழுது நீங்கள் உங்கள் உள் நினைவில் இருக்கிறீர்கள். அது உங்களை வெகு தூரத்துக்கு கொண்டு சென்றுவிடுகிறது. அப்பொழுது நீங்கள் அங்கு அடைகிறீர்கள், சொப்பனம் காண்கின்றீர்கள். ஆனால் நீங்கள் திரும்பிவந்து, உறக்கத்தினின்று எழுந்திருக்கும்போது.... வாழ்க்கையில் ஒரு முறையாவது சொப்பனம் கண்டு, அதை இன்னமும் ஞாபகம் வைத்திராதவர் ஒருவர் கூட இல்லை என்பதில் சந்தேகமில்லை. உங்களில் ஏதோ ஒரு பாகம் எங்கோ உள்ளது நீங்கள் உங்கள் சுய நினைவுக்கு வரும்போது, அந்த சொப்பனத்தை இன்னமும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடிகிறது. ஒருக்கால் அநேக ஆண்டுகளுக்கு முன்பு அந்த சொப்பனம் கண்டிருக்கலாம். நான் சிறுவனாயிருந்தபோது கண்ட சொப்பனங்களை இப்பொழுதும் ஞாபகம் வைத்திருக்கிறேன் அப்படியானால் என்னில் ஒருபாகம் எங்கோ இருக்கவேண்டும். அதுதான் சொப்பனங்கள். பாருங்கள். அப்பொழுது நீங்கள் உங்கள் புலன்களிலிருந்து வெகுதூரம் இருக்கின்றீர்கள். அவை திரும்பி வரும்போது, நீங்கள் கண்ட சொப்பனத்தைக் கூறுகின்றீர்கள். அது தேவனால் உண்டாயிருந்தால்..... 29சொப்பனங்களுக்கு அர்த்தம் உரைப்பவர் இருக்கக்கூடும். “உங்களுக்குள்ளே ஒருவன் ஆவிக்குரியவனாக, தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் சொப்பனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, தரிசனத்தின் மூலம் அவனோடே பேசுவேன்'' என்று வேதம் உரைக்கிறது (எண். 12:6). யாக்கோபின் குமாரனாகிய யோசேப்பு அப்படிப்பட்ட ஒரு மனிதனாக இருந்தான் என்று நாம் காண்கிறோம். அவர்கள் சொப்பனங்களைக் காண்பார்கள், அவன் அவைகளுக்கு அர்த்தம் உரைப்பான். அவனால் சொப்பனங்களுக்கு அர்த்தம் உரைக்க முடிந்தது. அவன் தரிசனங்களைக் கண்டான். இவையனைத்தும் ஆவியின் கிரியையாகும். 30ஒரு மனிதன் ஞான திருஷ்டிக்காரனாக இருக்க பிறந்து, அல்லது தரிசனங்களைக் காண்பானானால்... அதற்காக நீங்கள் தேவனால் அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் நாம் காண்கிறோம். கவனியுங்கள், இங்கே உங்கள் உள் நினைவு, இயற்கையானது. இங்கே உங்கள் சுயநினைவு. நீங்கள் உங்கள் ஐம்புலன்களினின்றும் விடுபட்டு, உறங்கச் சென்று, உள் நினைவுக்குள் பிரவேசித்து, திரும்பவும் உங்கள் சுயநினைவுக்கு வரவேண்டும். அது தான் சொப்பனம். ஆனால் ஒரு ஞானதிருஷ்டிக்காரனுக்கு இரண்டு நினைவுகளுமே ஒன்றாக உள்ளன. நீங்கள் ஐம்புலன்களிலிருந்து விடுபடுவதில்லை. நீங்கள் ஐம்புலன்களிலே இருந்து கொண்டு, அங்கு நின்று கொண்டு, என்ன நடக்கிறது என்பதைக் காண்கிறீர்கள். பாருங்கள், உங்கள் புலன்களிலிருந்து நீங்கள் விடுபடுவதில்லை. நீங்கள் அங்கேயே இருக்கிறீர்கள்; எங்கே இருக்கிறீர்கள் என்றும், என்ன செய்கிறீர்கள் என்று அறிந்தவர்களாய், உங்கள் வார்த்தைகளைப் பேசுகிறீர்கள். அது முன்குறிக்கப்பட்ட வரம். ''வரங்களும் அழைப்புகளும் மனந்திரும்புதல் இல்லாமலே அளிக்கப்படுகின்றன.'' (ஆங்கிலத்தில் “Gifts and callings of God are without repentance'' என்று ரோமர் 11:29ல் கூறப்பட்டுள்ளது. ”தேவனுடைய கிருபை வரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே'' என்று தமிழ் வேதாகமத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்). பாருங்கள், தேவன் அதை செய்கிறார். நீங்கள் உறங்கச் செல்வதில்லை. நீங்கள் இருகண்களும் திறந்தவர்களாய் நின்று கொண்டு, நீங்கள் பார்ப்பதை நேராகப் பார்க்கிறீர்கள். தரிசனம் தேவனால் உண்டானது என்பது நிச்சயம். 31ஆனால் நாமோ இன்று உறங்கிக் கொண்டிருக்கிறோம். இன்று உலகத்தினிடம் உள்ள தொல்லை அதுவே, அது உறங்கிக் கொண்டிருக்கிறது. அநேகர் உறங்குவதற்கு பிரியப்படுகின்றனர். ஆனால் இதை நான் கூற விரும்புகிறேன். பரலோகத்தில் படுக்கைகள் கிடையாது. நாம் பரலோகத்துக்கு செல்லும்போது, அங்கு உறங்க மாட்டோம். ஏனெனில் அங்கு இரவு என்பதே இல்லை. எனவே நீங்கள் பரலோகத்துக்கு செல்லும்போது, அங்கு உறங்க மாட்டீர்கள். அங்கு படுக்கைகளும் கிடையாது. கவனியுங்கள், நமது சுயநினைவு. தேவனிடம் நாம் சமர்ப்பிக்கும் நமது ஒவ்வொரு பாகத்தையும் அவர் உபயோகிக்க முடியும். நாம் என்னவாயிருக்கிறோமோ அவையனைத்தும் தேவனுடைய கரங்களில் கொடுக்கப்பட்டு, அவருடைய ஊழியத்திற்கென்று சமர்ப்பிக்கப்படும்போது, அவர் நம்மை சொப்பனங்களில் உபயோகிக்க முடியும், அவர் நம்மை பேச்சில் உபயோகிக்க முடியும், நமது புலன்கள் அனைத்தையும் அவர் உபயோகிக்க முடியும். நாம் என்னவாயிருக்கிறோமோ அவையனைத்தும் தேவனிடம் சமர்ப்பிக்கப்பட்டால், தேவன் அதை உபயோகிக்க முடியும் நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? பாருங்கள், நமது அனைத்தும் அவரிடம் சமர்ப்பிக்கப்படும்போது, அவர் அதை உபயோகிக்க முடியும். நமது அனைத்துமே சமர்ப்பிக்கப்படும்போது, கிறிஸ்தவர்கள் இந்த நாளிலும், காரியங்களை அவர்களுக்கு முன்னறிவிக்கும் ஆவிக்குரிய சொப்பனங்களைக் காணமுடியும். அது உண்மையென்று நாமறிவோம். 32ஒரு ஆவிக்குரிய சொப்பனத்துக்கு சரியான அர்த்தம் உரைத்தால், அதுவும் தரிசனமும் ஒன்றே. தரிசனம் என்றால் என்ன? எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் சம்பவங்களை முன்கூட்டி அறிவிப்பதே தரிசனம். அது நடப்பதற்கு முன்பே அதை முன்னுரைக்கிறது. அந்த விதமாகத்தான் தேவன், அது உண்மையா இல்லையாவென்றும், பழைய ஏற்பாட்டின் காலத்திலிருந்த ஒரு மனிதன் தீர்க்கதரிசி தானா என்பதையும் நிருபிக்கிறார் - அவன் உரைத்தது நிறைவேறுவதன் மூலம். அந்த மனிதன் முன்னுரைத்தது ஒவ்வொரு முறையும் நிறைவேறிக் கொண்டே வந்தால் அவன் தீர்க்கதரிசியென்று அவர்கள் அறிந்து கொண்டார்கள். அந்த மனிதனின் மேல் கைகளை வைத்து, அவனைக் குலுக்கி, அவனுக்கு இந்த வரத்தைக் கொடுக்க முடியாது. அவன் அந்த வரத்துடன் பிறக்கிறான். அவன் பிறக்கும்போதே அது அவனுடன் சேர்ந்து பிறக்கிறது. அவன் பிறப்பதற்கு முன்பும் அந்த வரம் அவனுடன் இருக்கிறது. 33ஏசாயா தீர்க்கதரிசியைப் பாருங்கள். யோவான் ஸ்நானன் பிறப்பதற்கு எழுநூற்று பன்னிரண்டு ஆண்டுகட்கு முன்பே, ஏசாயா அவனைக்குறித்து. “வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாயிருக்கும்'' என்று தீர்க்கதரிசனம் உரைத்தான் (ஏசா. 40:5). எரேமியாவைப் பாருங்கள். அவன் தன் தாயின் வயிற்றில் உருவாகும் முன்பே, அவரின் கர்ப்பத்திலிருந்தபோதே தேவன், ''நான் உன்னைப் பரிசுத்தம் பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன்'' என்றார் (எரே. 1:5). பாருங்கள்? “வரங்களும் அழைப்புகளும் மனந்திரும்புதலின்றி அளிக்கப்படுகின்றன.” அங்கே கிரியை செய்வதற்கு ஏதாவதொன்று இருக்கும்போது மாத்திரமே, உங்களால் கிரியை செய்யமுடியும். உதாரணமாக, கிரியை செய்ய உனக்கு வலது கை இருந்தால், அது தேவ னுடைய ராஜ்யத்திற்கெனகிரியை செய்யட்டும். காண்பதற்கு உனக்கு கண்கள் இருந்தால், நீ சரியான காரியங்களைப்பார்; பேசுவதற்கு உனக்கு உதடுகளும் சப்தமும் இருந்தால், நீ சரியான காரியங்களைப்பேசு. எதுவானாலும் சரியான காரியங்களையே செய். உனக்குள்ள எல்லாவற்றையும் தேவனிடம், அவருடைய மகிமைக்காக, ஒப்புவி. 34இந்த முன்னறிவிப்பு, எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் சம்பவங்களை, அவை நடப்பதற்கு முன்பே, முன்கூட்டி அறிவிக்கின்றது என்று நாம் காண்கிறோம். அது வினோதமாகத் தென்பட்டாலும், சர்வ வல்லமையுள்ள தேவன் குழந்தை இயேசுவின் நலனைக் கருதி, என்ன செய்ய வேண்டுமென்பதை ஒரு சொப்பனத்தின் மூலம் முன்னுரைத்து வெளிப்படுத்தினார். தேவன் தமது சொந்தக் குமாரனைக் குறித்து, இந்த இரண்டாம் வழியாகிய சொப்பனத்தின் மூலம், யோசேப்புக்கு வெளிப்படுத்தினதாக வேதம் கூறுகின்றது. ஆம், ஐயா. யோசேப்பு நல்லவன். அவன் தாவீதின் குமாரன். அவன் மரியாளுக்கு நியமிக்கப்பட்டிருந்தான். நாம் தொடர்ந்து செல்வதற்கு முன்பு, இதைக் கூற விரும்புகிறேன்... கிழக்கத்திய நாடுகளில் ''நியமிக்கப்படுதல் - நிச்சயதார்த்தம் - என்பது, திருமணத்திற்கு சமானம். அவர்கள் நியமிக்கப்பட்டவுடனே, மணம் புரிந்து கொண்டதாக கருதப்படுகின்றனர். அவர்களிருவரும் இந்த பரிசுத்தமான பொருத்தனையை செய்து - உபகாமம் 22:23ஐ படித்துப் பாருங்கள் - ஸ்திரீயும் மனிதனும் விவாகம் செய்து கொள்ள சம்மதிக்கும்போது (அதன் பின்பு சில மாதங்கள் கழித்தே அவர்கள் விவாக பொருத்தனை செய்கின்றனர்), அவர்கள் நியமிக்கப்பட்டபோது ஏறெடுத்த பொருத்தனையை மீறினாலும் கூட, அவர்கள் விபச்சாரஞ் செய்த குற்றத்துக்கு ஆளாவார்கள். அது உண்மை. அவர்கள் நியமிக்கப்படும்போது, அது விவாகம் புரிந்து கொண்டதற்கு சமானம். ஆனால் அவர்கள் கணவனும் மனைவியுமாக வாழ அப்பொழுது பிரமாணம் அவர்களுக்கு உரிமையளிப்பதில்லை. ஆனால் தேவனுடைய சமுகத்தில், அவர்களிருவரும் வாக்கு கொடுக்கும்போது, அவர்களுடைய வார்த்தைகள் தேவனுடைய ராஜ்யத்தில் முத்தரிக்கப்பட்டு விடுகின்றன. அதை மீறினால், அவர்கள் விபச்சாரஞ் செய்தவர்களாகி விடுவார்கள். யோசேப்பு மரியாளுக்கு “நியமிக்கப்பட்டிருந்தான்.'' போதகர் சகோதரர்களே. அதை நீங்கள் சரியாகப் படித்தால், இன்றைக்கு விவாகமும் - விவாகரத்தும் என்பதைக்குறித்து மக்களிடையே காணப்படும் கடினமான, வித்தியாசமான பிரச்சனைகள் தெளிவாகும். இப்பொழுது அவளுடைய கணவனான யோசேப்பை கவனியுங்கள். அவன் நீதிமான், பாருங்கள், அதை மீறமுடியாது என்பதை நாம் காண்கிறோம். 35அவள் அவனிடம் சொல்லியிருப்பாள். இந்த அழகான வாலிப யூதக் கன்னிப்பெண்..... நான் அறிந்த வரையிலும் இங்குள்ள நாம் அனைவருமே வயது வந்தவர்கள். அவள் தாயாகும் நிலையையடைந்தாள். யோசேப்பு அவளுடன் சென்றபோது இதை கவனித்திருப்பான் என்பதில் சந்தேகமில்லை. அவன் அவளுக்கு நியமிக்கப்பட்ட பின்பு, அவள் தாயாகப் போவதை அறிந்துகொண்டான். அவன் நீதிமான். வேதம் அவ்வாறு கூறுகின்றது. அவள் களங்கமற்றவள் என்று அவனிடம் சொல்லியிருப்பாள். அந்த அழகான பெண் யோசேப்பிடம் இவ்வாறு கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. “என் பிரியமுள்ள நண்பரே, என் அருமை கணவர் யோசேப்பே, இந்த விஷயத்தில் நான் களங்கமற்றவள்.'' அவள் அவனிடம், பிரதான தூதனாகிய காபிரியேல் அவளைச் சந்தித்ததைக் குறித்தும், என்ன சம்பவிக்கப் போகின்றது என்று அவன் கூறிய இந்த மகத்தான அடையாளங்களைக் குறித்தும் சொல்லியிருப்பாள். 36பிரதான தூதன் அவளைச் சந்தித்த பிறகு, அவனுடைய செய்தியினால் அவள் மிகவும் களிகூர்ந்து, அவள் பிறந்த ஊராகிய அந்த எளிய நாசரேத்தை விட்டு, மலைப்பாங்கான யூதேயாவுக்குப் புறப்பட்டு சென்றாள். அவள் அங்கு சென்றபோது, மலடி என்றழைக்கப்பட்ட... அவளுடைய ஒன்றுவிட்ட சகோதரியாகிய எலிசபெத்தும் தாய்மை பருவத்தை அடைந்திருந்தாள். (ஏற்கனவே ஆறு மாதங்கள்). அவளுடைய கணவன் சகரியா தேவாலயத்தில் ஆசாரியானாக இருந்தான். ஒருநாள் அவன், வெளியிலேயிருந்த ஜனங்கள் செய்து கொண்டிருந்த ஜெபத்துக்காக காணிக்கையை அசைவாட்டிக் கொண்டிருந்தபோது - அது தூபங்காட்டுதல் - கர்த்தருடைய தூதனாகிய காபிரியேல் தோன்றினான். அவன் இதற்கு முன்பு காணப்படவில்லை, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இயற்கைக்கு மேம்பட்ட எதையுமே ஜனங்கள் காணவில்லை. ஆனால் பீடத்தின் வலது பாகத்தில் இந்த தூதன் வந்து நின்று, அவனுடைய மனைவி கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள் என்றும், அவன் அவனுக்கு யோவான் என்று பெயரிடுவான் என்றும் சொன்னான். அந்த வரலாறு நம் அனைவருக்கும் தெரியும். (லூக். 1: 11-13). ஆறு மாதங்கள் கழித்து காபிரியேல் நாசரேத்தில் மரியாளை சந்தித்து, அவளுடைய ஒன்றுவிட்ட சகோதரியாகிய எலிசபெத்துக்கு நடந்ததைக் கூறினான். உடனே மரியாள், அந்த பெரிய இரகசியத்தை தன் இருதயத்தில் வைத்துக் கொண்டு, தன் ஒன்றுவிட்ட சகோதரியைக் காண மலைகளுக்கு விரைந்தாள். 37எலிசபெத் தான் இருந்த நிலையில் மனிதர்களுக்கு முன்னால் வர விரும்பாமல், ஆறு மாதங்களாக தன்னை மறைத்துக் கொண்டாள், நான் வேதத்தை புரிந்து கொண்ட விதமாக, அது வரைக்கும் அந்த குழந்தைக்கு ஜீவன் இல்லை என்று அவள் கவலை கொண்டிருந்தாள். கர்ப்பமுற்று மூன்று, நான்கு மாதங்களுக்கு பிறகு குழந்தை வயிற்றினுள் அசையாமலிருப்பதென்பது அசாதாரணமான காரியம். ஆனால் ஆறு மாதங்களாகியும் எலிசபெத்தின் வயிற்றிலிருந்த குழந்தை அசையவேயில்லை. ஆனால் எலிசபெத்தும் மரியாளும் சந்தித்தபோது, ஒன்றுவிட்ட சகோதரிகள் என்னும் முறையில் அவர்கள் ஒருவரையொருவர் கட்டித் தழுவி, ஒருவர் மற்றவரை கண்டதில் மகிழ்ச்சி கொண்டனர் என்பதில் ஐயமில்லை. அவர்கள் என்ன கூறினார்கள் என்று சிந்தித்து பார்ப்போம். எலிசபெத் மரியாளிடம், ''ஓ, அன்பே, நீ மிகவும் அழகாக இருக்கிறாய்'' என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. மரியாள், ''நீ கர்ப்பவதியாயிருப்பதை நான் அறிவேன்'' என்றாள். ''ஆம். ஆறு மாதங்களாகியும் குழந்தை வயிற்றில் அசையவில்லை. அது என்னைத் தொல்லைப்படுத்துகிறது.'' “ஓ, நான் உன்னிடம் ஒன்றைக் கூற வேண்டும். அதை என்னால் இனியும் மறைத்து வைக்கமுடியாது.'' 38உங்களுக்குத் தெரியுமா, நீங்கள் தேவனுடன் தொடர்பு கொள்ளும்போது, அதைக்குறித்து நீங்கள் அமைதியாயிருக்க முடியாது. நீங்கள் உண்மையாகவே இரட்சிக்கப்பட்டிருந்தால், அதைக்குறித்து நீங்கள் ஏதாவதொன்றை மற்றவர்களிடம் சொல்லியே ஆகவேண்டும். நீங்கள் எங்கிருந்தாலும் எனக்குக் கவலையில்லை, அதை எங்காவது வெளிப்படையாக அறிவித்தே ஆகவேண்டும். ''உனக்குத் தெரியுமா, உன்னிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். எனக்கும் குழந்தை பிறக்கப்போகிறது'' என்று மரியாள் எலிசபெத்திடம் கூறினது என் காதில் விழுகிறது. எலிசபெத், ''ஓ, நான் நினைக்கிறேன்...... அப்படியானால் நீயும்: யோசேப்பும் விவாகம் செய்து கொண்டபோது எங்களை ஏன் அழைக்கவில்லை? நீ நியமிக்கப்பட்டிருந்தாய் என்று எனக்குத் தெரியும். ஆனால் விவாகத்துக்கு எங்களை ஏன் அழைக்கவில்லை?'' என்று கேட்டிருப்பாள். “ஓ, எங்களுக்கு இன்னும் விவாகம் ஆகவில்லை.'' “உனக்கு குழந்தை பிறக்கப் போகிறதா?'' ''ஆமாம்'' ''மரியாளே, எனக்கு ஒன்றுமே புரியவில்லை.'' ''உனக்குத் தெரியுமா? கர்த்தருடைய தூதனாகிய காபிரியேல் என் முன் தோன்றினான். நீ கர்ப்பவதியானதைக் குறித்து அவன் தான் என்னிடம் கூறினான். பரிசுத்தஆவி என் மேல் நிழலிடுவார் என்றும், என்னிடத்தில் பரிசுத்தமானது பிறக்கும் என்றும், அவர் தேவனுடைய குமாரன் எனப்படுவார் என்றும், அவருக்கு நான் இயேசு என்று பெயரிட வேண்டும் என்றும், ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றும் கூறினான்.'' 39அந்த அற்புதமான நாமம் முதன்முறையாக மனித உதடுகளின் மூலம் உச்சரிக்கப்பட்ட போது, தன் தாயின் கர்ப்பத்தில் மரித்துப் போயிருந்த குழந்தை யோவான், களிப்பால் துள்ளி பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டான் - தாயின் கர்ப்பத்தில் மரித்தவன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தை உச்சரிப்பதனால் உண்டாகும் வல்லமை தன் தாயின் கர்ப்பத்தில் மரித்துப் போயிருந்த குழந்தையை உயிர்பெறச் செய்யுமானால், அவருடைய ஆவியினால் பிறந்து, அவருடைய ஊழியக்காரர் என்று உரிமைகோரும் சபைக்கு அது என்ன செய்யவேண்டும்? எலிசபெத் திடுக்கிட்டு, மரியாளைப் பார்த்து. ''என் ஆண்டவருடைய தாயார் எப்போது வந்தாள், என் ஆண்டவருடைய தாயார், நீ வாழ்த்தின சத்தம் என் காதுகளில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய் துள்ளிற்று என்றாள்.'' (லூக். 1:43,44). இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால், யோவான் தன் தாயின் கர்ப்பத்திலேயே பரிசுத்த ஆவியால் நிறைந்தவனாய் பிறந்தான். அது எப்படிப்பட்ட குழந்தையாக இருந்திருக்க வேண்டும்! இதை அவள் யோசேப்பிடம் அப்படியே கூறினாள் என்பதில் சந்தேகமில்லை. 40இப்பொழுது பாருங்கள், யோசேப்பு நீதிமானாயிருந்த காரணத்தால், இவ்வாறு நினைத்தான்: ''அவள் விபச்சாரத்தில் பிடிபட்டால் அவளுக்கு முதலாவதாக நேரிடப்போவது, அவள் கல்லெறியப்படுவாள். அவளுக்கு இது நேரிடக்கூடாது.'' அவர்கள் அவ்வாறு வாழமுடியாது. ''நகரத்தில் ஒரு கன்னிகை நியமிக்கப்பட்டிருந்து, அவள் ஒரு மனிதனால் கற்பழிக்கப்படும் போது, அவள் கூச்சலிடாமலிருந்தால், அவர்கள் இருவருமே ஒன்றாக கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். ஆனால் அவள் நகரத்தில் வயல் வெளியில் இருக்கும்போது, அவன் கூச்சலிடுவதைக் கேட்க யாரும் இல்லாவிட்டால், அவளை கற்பழித்தவன் கொல்லப்பட வேண்டும். அவள் உயிர் வாழ வேண்டும்'' என்று வேதம் கூறுகிறது. இதைக்குறித்த தண்டனை உபகாமம் 22ம் - அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. அதை நீங்கள் வாசிக்கும்படி சற்று முன்பு உங்களைக் கேட்டுக் கொண்டேன். 41இப்பொழுது கவனியுங்கள், அவள் விவாகமாகாமல் தாய்மை பருவத்தை அடைந்ததாக நாம் காண்கிறோம். எனவே பரியாசக்காரரிடமிருந்தும், நிந்திக்கிறவர்களிடமிருந்தும் தன்னை மறைத்துக் கொள்ள மரியாள் யோசேப்பை ஒரு கேடயமாக உபயோகிக்க முயல்வதுபோல் அவனுக்குத் தோன்றினது. பாருங்கள், யோசேப்பு அவளுடைய கேடயமாயிருக்க வேண்டும்; அவளை எப்படியாயினும் விவாகம் செய்து அவளுக்கு கேடயமாயிருக்க வேண்டுமேயன்றி, குடும்ப உறவில் அவளுக்கு கணவனாக அல்ல, ஆனால்.... அவன் அவளுக்கு கேடயமாக இருக்கவேண்டும். அவன் அவளை நம்ப வேண்டுமென்று விரும்பினான். அதை நான் உண்மையாக விசுவாசிக்கிறேன். அவன் அவளை நம்ப வேண்டுமென்று விரும்பினான். ஆனால் அவள் கூறின வரலாறு வழக்கத்திற்கு மாறாக இருந்தபடியால், அந்த விசுவாசிக்கு அதை விசுவாசிப்பது கடினமாயிருந்தது. 42மனிதரே, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். இன்றைக்கும் அவ்வாறே உள்ளது. இன்று பூமியின்மேல், சபையில் காணப்படும் பரிசுத்த ஆவியின் வல்லமையைக் குறித்த வரலாறு ஸ்தாபனங்களுக்கும் ஸ்தாபன சிந்தைக்கும் வழக்கத்திற்கு மாறாக உள்ளது. அவர்கள் அதை விசுவாசிக்க வேண்டுமென்று விரும்பினாலும், அது அவர்களுக்கு வழக்கத்திற்கு மாறாகவும், மூடபக்தி வைராக்கியமுள்ளதாகவும் காணப்படுகின்றது. ஆனால் அது உண்மை! அவ்விதமாக இருக்கும் என்று வேதம் கூறியுள்ளது, இதோ அது நிறைவேறுகின்றது. சில கோட்பாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ள அநேக மனிதர் இதை விசுவாசிக்க விரும்புகின்றனர். ஆனால் இது வழக்கத்திற்கு மாறாக உள்ளபடியால், அவர்களால் முடியவில்லை. அவர்களுக்கு என்னசெய்வதென்றே தெரியவில்லை. யோசேப்பைப் போன்று அவர்களும் ஒரு தர்ம சங்கடமான நிலையில் உள்ளனர். 43“அவள் இப்படிப்பட்ட காரியங்களைச் சிந்தித்துக் கொண்டிருக்கையில்'' என்று வேதம் கூறுகின்றது. பாருங்கள் அவன் நல்லவன், தன் சொந்த பெயர் கறைபடுவதை அவன் விரும்பவில்லை. அவள் அந்நிலையில் இருந்தால், அவன் அவளை விவாகம் செய்து கொள்ள முடியாது என்பதை அறிந்திருந்தான்; ஏனெனில் அவள் வேறொருவரின் மூலம் தாய்மை பருவம் அடைந்துவிட்டாள். அவன், ”ஆயினும் அந்த களங்கமற்ற சிறு பெண்ணின் வாழ்க்கை லீலிப்புஷ்பத்தை போல் தூய்மையாய் இருந்து வந்துள்ளது, அவளை நான் நம்ப விரும்புகிறேன். என்ன செய்வதென்றே தெரியவில்லை'' என்றான். அவன் இப்படிப்பட்ட காரியங்களைச் சிந்தித்து, அவளை இரகசியமாக தள்ளிவிட மனதாயிருந்தான். அவன், “நான் இதைக்குறித்து எவ்வித தொந்தரவும் உண்டாக்க மாட்டேன்'' என்றான். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், அவன் இன்னும் விவாகப் பொருத்தனை செய்யவில்லை. அவன் நியமிக்கப்பட்டிருந்தான். ஆனால் அவன் அவளை இரகசியமாக தள்ளிவிட்டான். ''அவளை இரகசியமாக தள்ளிவிட வேண்டுமென்று அவன் சிந்தித்துக் கொண்டிருக்கையில் பாருங்கள், அவனுடைய அறிவுக்கு எட்டின வரைக்கும், பாருங்கள். அவன் நீதிமான், நல்லவன். சகோதரனே, சகோதரியே, இதை கூற விரும்புகிறேன். நீங்கள் நீதிமான்களாயும், உங்கள் இருதயத்தில் உத்தமமாயும் இருப்பீர்களானால் இந்த காரியத்தை உங்களுக்கு வெளிப்படுத்த தேவன் கடமைபட்டிருக்கிறார். 44அவளுடைய கணவனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்தபடியால், இப்படிப்பட்ட காரியங்களை குறித்து ஆழ்ந்து சிந்தித்தான். அது மிகவும் அசாதாரணமான ஒன்று. நான் கூறின விதமாகவே, அவனால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை. “இவை எப்படியிருக்க முடியும்? ஆனால் அவன் உட்கார்ந்து, அதைக்குறித்து ஜெபம் செய்து, வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்து, ”இவை எப்படியிருக்க முடியும்?'' என்று சிந்தித்தான் என்பதில் சந்தேகமில்லை. அவன் இவ்வாறு ஆராய்ந்து கொண்டிருந்தபோது, கர்த்தருடைய தூதன் அவனுக்கு சொப்பனத்தில் தரிசனமானான். அவன் ஒரு தீர்க்கதரிசியல்ல அந்த நாட்களில் பூமியில் ஒரு தீர்க்கதரிசியும் இல்லை. ''காத்தர் உரைக்கிறதாவது'' என்பதுடன் அவனிடம் வருவதற்கு யாருமே கிடையாது. எனவே கர்த்தர் இரண்டாந்தரமான முறையை கைக்கொண்டார். தம் சொந்த குமாரனின் நலனுக்காக தேவன் ஒரு சொப்பனத்தின் மூலம் ஒரு மனிதனுக்கு வெளிப்படுத்தி, அவரை எகிப்துக்கு கொண்டு சென்று, மறுபடியும் அங்கிருந்து கொண்டு வந்து, சாஸ்திரிகளிடமிருந்து அவரை மறைத்தார்; இல்லை, சாஸ்திரிகள் வேறு வழியாகச் சென்றனர். தேசத்தில் தீர்க்கதரிசி இல்லாததனால், தேவன் இரண்டாம் முறையாகிய சொப்பனத்தை தெரிந்து கொண்டார். ஞானதிருஷ்டிக்காரனாக இருக்க பிறக்காத ஒரு மனிதன் இருந்தான். ஆனால் அவன் நல்லவன். அவர்கள் இவ்வாறு செய்தபோது, தேவன் அவர்களுடைய உள்நினைவில் அவர்களை சந்தித்து தம்மை வெளிப்படுத்தினார். உங்களை நீங்கள் சற்று தேவனுக்கு ஒப்புவிப்பீர்களானால், தேவன் தம்மை உங்களுக்கு வெளிப்படுத்த அநேக வழிகளைக் கொண்டிருக்கிறார். பாருங்கள்? நீங்கள் தீர்க்கதரியாக இல்லாமலிருக்கலாம், நீங்கள் ஞாயிறு பள்ளி உபாத்தியாயினியாக இல்லாமலிருக்கலாம், நீங்கள் போதகராக இல்லாமலிருக்கலாம். ஆனால் தேவன் தம்மை உங்களுக்கு வெளிப்படுத்துவதற்கு அநேக வழிகள் உண்டு, பாருங்கள். அது சொப்பனமானாலும், வேறெந்த வழியிலானாலும்; நீங்கள் மாத்திரம் யோசேப்பைப் போல் உங்களை ஒப்புவிப்பீர்களானால். 45''ஓ, மகத்தான யேகோவாவே, தேவனே, நான் தாவீதின் சந்ததியில் பிறந்தவன். நான் நீதிமான் என்று நம்புகிறேன். நீர் கூறியுள்ளவை சத்தியம் என்று நம்புகிறேன். நான் பெற்றுள்ள இந்த அருமையான, இருதயத்துககு இனியவளுக்கு, நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன், அவளை நாள் தள்ளிவிடப் போகிறேன். இல்லையென்றால் நான் விபச்சாரம் செய்த குற்றத்துக்கு ஆளாவேன். அவள் தாயாகப் போகின்றாள். அவளை மனைவியாக நான் அறியவில்லை. கர்த்தவே, இவையெல்லாம் என்ன?'' என்று யோசேப்பு சொல்லியிருப்பான் என்பதில் சந்தேகமில்லை. பாருங்கள், அவன் தீர்க்கதரிசியல்ல. எனவே அந்த முறையில் அவர் அவனுடன் பேச முடியாது, அவர் அவனை உறங்கச் செய்து, சொப்பனத்தில் கர்த்தருடைய தூதனை அவனிடம் அனுப்பினார். ஆமென். கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனிடம் வந்து, அவனைத் தொட்டு, “தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாகி இருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது'' என்றான். (மத்.1:20), பார்த்தீர்களா? ”அவளுக்குள் இருப்பது, ஒரு மனிதனால் உற்பத்தியானதல்ல, பரிசுத்த ஆவியானவரே அதை செய்தார். அவள் உன்னிடம் உண்மையைத்தான் கூறினாள். யோசேப்பே, வழக்கத்திற்கு மாறாக நிகழ்ந்த இச்சம்பவம் உன்னை கலங்கச் செய்துவிட்டது. அது பரிசுத்த ஆவியால் உண்டானது.'' 46ஓ, அதே தேவன் இன்றிரவும் ஜீவிக்கிறார்! நீங்கள் இன்னும் உள்நினைவைப் பெற்றிருக்கிறீர்கள். உங்களுக்கு...... கிறிஸ்தவர்களே, நீங்கள் காணும் காரியம் வழக்கத்திற்கு மாறானது என்று உங்களுக்குத் தென்பட்டாலும், அது தேவனுடைய வார்த்தையுடன் சரிவர பொருந்துமானால், அந்த வழக்கத்திற்கு மாறான காரியங்களை தேவன் அநேக வழிகளில் உங்களுக்கு வெளிப்படுத்திக் காண்பிக்கக் கூடியவராயிருக்கிறார். எனவே அவர் யோசேப்பிடம், “தாவீதின் குமாரனே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே'' என்றார். அவள் ஏற்கெனவே அவனுடைய மனைவி என்பதை நினைவில் கொள்ளுங்கள். ”உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள். ஏனெனில் அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.'' தேவன் தமது தூதனை அனுப்பி அதை வெளிப்படுத்தினார். யோசேப்புக்கு அந்த வெளிப்பாடு சொப்பனத்தின் மூலம் கிடைத்தது. அது மர்மம் ஏதுமில்லை என்று அவன் அறிந்து கொண்டான். தூதன் சொப்பனத்தில் அவனிடம் வந்தான். அவன் சொப்பனத்தில் தூதனைக் கண்டான். 47ஒரு தீர்க்கதரிசி அல்லது ஞானதிருஷ்டிக்காரன் அதற்காக உறங்க வேண்டிய அவசியமில்லை. அவன் விழித்துக் கொண்டே தூதன் நிற்பதைக் காண்கிறான். ஆனால் மற்றவனோ உறங்கச் சென்று தூதனைக் காண்கிறான். தூதன், ''யோசேப்பே, இது ஒரு புதிர் அல்ல. இதற்கு அர்த்தம் உரைக்க உனக்கு யாருமில்லை. எனவே நான் இதைக்குறித்து விளக்கிக் கூறப்போகிறேன். ஏனெனில் அதை விளக்கிக் கூறுவதற்கு யாருமே அங்கில்லை. உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே. ஏனெனில் அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது'' என்றான். யோசேப்பு உறக்கத்தினின்று எழுந்தபோது. ஓ, புதிதாய் பிறந்த விசுவாசத்தினால் அவனுடைய இருதயம் எவ்வளவாக நிறைந்திருக்கும்! அவனைத் தொல்லைப்படுத்திக் கொண்டிருந்த அந்த இரகசியத்தை அவன் விசுவாசிக்க வேண்டுமென்று விரும்பினான். அவன் விசுவாசிக்க தைரியங்கொண்டான். அது வழக்கத்திற்கு மாறான ஒன்றாக இருந்தது. ஆனால் அது சொப்பனத்தில் அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது. அவனுடைய வாழ்க்கையில் புது விசுவாசம் பிரவாகித்து ஓடியது. ஓ, என் னே! அவன் தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாயிருந்தான். அவன் மனைவியின்மேல் நம்பிக்கை கொண்டிருந்தான் - தேவன் பேரில் விசுவாசமும், அவன் நேசித்த தன் மனைவியின் பேரில் அன்பும், இரண்டுமே அதன் பின்பு அவனுக்கு அதைக்குறித்து வேறு கேள்வியே இல்லை. அது கர்த்தருடைய தூதன் என்பதை அவன் அறிந்து கொண்டான். அவன் மனதில் எழுந்திருந்த கேள்விக்கு தேவன் சரியான விடையை அவனுக்கு அளித்து விட்டார் என்பதையும் அவன் அறிந்து கொண்டான். எனவே எல்லா கேள்விகளும் போய் விட்டன. 48தேவன், தாம் விரும்பும் எந்த வழியிலாகிலும், உங்கள் மனதில் உள்ள கேள்விக்கு உங்களுக்கு விடையளிப்பாரானால், அதன் பிறகு உங்களுக்கு எவ்வித சந்தேகமும், எவ்வித கேள்வியும் இருக்காது. அது ஒரு வெளிப்பாடு. வேதத்தில் நீங்கள் ஏதாவதொன்றைக் காணும் போது, ''அது அப்போஸ்தலர்களுக்கு மாத்திரமே என்று எண்ணுகிறேன். இயேசு கடந்து போன நாட்களில் அதை செய்தார் என்று எண்ணுகிறேன்'' என்கிறீர்கள். ஆனால் வேதமோ, “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார், அதே இயேசு'' என்கின்றது. அதுவே உங்கள் கேள்வியாயிருந்தது. அதைக்குறித்து நீங்கள் யோசனைபண்ணி, அது நிகழ்வதைக் கண்டு வியப்புற்றால், நீங்கள் மாத்திரம் உத்தமமாயிருந்தால், கர்த்தருடைய தூதன் எவ்வகையிலாகிலும் அதை உங்களுக்கு வெளிப்படுத்தி தருவார்: அதன்பிறகு அது கேள்வியாக அமையாமல், சத்தியமாக இருக்கும். ஓ! அப்பொழுது நீங்கள், ''ஓ, நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன்'' என்று கூச்சலிட்டு சத்தமிடலாம். 49அது நிகழ்ந்தபோது யோசேப்பின் மகிழ்ச்சி எவ்வாறிருந்திருக்கும் என்று என்னால் கற்பனை செய்ய முடிகிறது. எல்லா... இரகசியம் அனைத்தும் முடிந்து விட்டது. அது முடிந்து விட்டபோது, அவன் களிகூர்ந்தான். அவன் மிக்க மகிழ்ச்சியடைந்தான். அவன் உடனே அவளை விவாகம் செய்து கொண்டான் என்று நாம் காண்கிறோம். ஓ, அவனுக்கு வேறு கேள்வியே இல்லை... அவன் மரியாளை தன் மனைவியாக சேர்த்துக் கொண்டு குழந்தை பிறக்குமளவும் அவளை மனைவியாக அறியவில்லை. (மத்.1:25). அதைக்குறித்து மகிழ்ச்சி கொண்டான்! மரியாளின் கேடயமாக இருக்க அவன் மகிழ்ச்சி கொண்டான். அவளுடைய நிந்தையை சுமக்க அவன் மகிழ்ச்சி கொண்டான். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பது ஒரு மனிதனுக்கு வெளிப்படுத்தப்படுமானால், எத்தனை கோட்பாடுகள் அவனை அதனின்று வழி திருப்ப முயன்றாலும் கவலையில்லை, நீங்கள் கேடயமாயிருக்க மகிழ்ச்சி கொள்வீர்கள். நீங்கள் கேடயமாயிருக்க மகிழ்ச்சி கொள்வீர்கள். அவர்கள் என்ன வேண்டுமானாலும் கூறட்டும். அந்த அக்கினியாஸ்திரங்களை அவித்துப்போட உங்களுக்கு ஒரு பெரிய கேடயம் உள்ளது. வெளியிலிருப்பவர்களுக்கு நான் பேசுவது அதிக சத்தமாயில்லை என்று நம்புகிறேன். அவர்களும் அதை கேட்கட்டும், அவர்கள் கேட்க வேண்டும். கவனியுங்கள். ஆம், ஐயா. 50நீங்கள் கேடயமாயிருக்க மகிழ்ச்சி கொள்வீர்கள். நீங்கள் ஒரு மிதியடி (doormat). நீங்கள் என்னவாயிருக்க விரும்பினாலும் பரவாயில்லை அது கர்த்தரால் உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. தேவன் தமது வார்த்தையைக் கொண்டு அது உண்மையென்று உங்களுக்கு காண்பித்து விட்டார்; அதன் பிறகு, அது மறுபடியும் ஜீவிக்க, அதை உங்களுக்கு உறுதிப்படுத்தி விட்டார். நீங்கள், “அது உண்மை! எதுவுமே என்னை மாற்றமுடியாது'' என்பீர்கள். எந்த மனிதனுக்கும், தேவனை முகமுகமாய் சந்திக்காமல், சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க உரிமையில்லை, அது உண்மை. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறாமல், எந்த மனிதனும் பிரசங்க பீடத்தில் நிற்கக்கூடாது. இயேசு சீஷர்களிடம், இப்பொழுது உபதேசம் பண்ணாதிருங்கள். ''உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரையில் எருசலேமிலேயே தங்கியிருங்கள்'' என்று கட்டளையிட்டார். பரிசுத்தஆவி வந்தபோது என்ன செய்ததென்று பாருங்கள். பரிசுத்தஆவி என்பது தேவன். 51பரிசுத்தஆவி இயேசுவுக்குப் பிதா. ''அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள்'' என்று மத்தேயு 2ம் அதிகாரம் 20ம் வசனம் உரைக்கிறது. பரிசுத்தஆவி இயேசுவுக்குப் பிதா. பரிசுத்தஆவி வந்து வார்த்தையை வெளிப்படுத்தி, அதை தத்ரூபமாக ஜீவிக்கக் செய்யும்போது, அது உங்களுக்கு வெளிப்பாடாகி விடுகிறது. அது திறந்து காட்டப்படுவதை நீங்கள் காண்கிறீர்கள். அது இந்த மணி நேரத்துக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது. ஏசாயா உரைத்த தீர்க்கதரிசனம் நிறைவேறுவதை யோசேப்பு கண்டான். ''நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார். அவருடைய நாமம் ஆலோசனைக் கர்த்தா, சமாதானப் பிரபு, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா என்னப்படும். அவருடைய ராஜ்யத்துக்கு முடிவில்லை'' என்று ஏசாயா 9 உரைக்கிறது, அது யாரென்பதை அவன் அறிந்துகொண்டான். ஏனெனில் கர்த்தருடைய தூதன் அவனிடம் இதைக் கூறி, “அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது'' என்று சொன்னபோது, எல்லாமே அவனுக்கு வெளிப்படையாயிற்று. ''ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெறுவாள்'' (ஏசா. 7:14). அது ஒரு பரம ரகசியமாகவும், தேவன் உலகத்திற்கு அளித்த உன்னத அடையாளமாகவும் திகழ்ந்தது. அது அவருடைய குமாரன் என்னும் ஒரு உன்னத அடையாளம். 52இப்பொழுது, நாம் தொடர்ந்து இதை பார்க்கும்போது, கவனியுங்கள். நான் நீண்ட நேரம் எடுத்துக் கொள்ள மாட்டேன், எடுத்துக் கொள்ளாமலிருக்க முயற்சிக்கிறேன். நாம் தொடர்ந்து பார்க்கும்போது இதை காண்கிறோம், இயேசு... நான் நினைக்கிறேன். இங்குள்ள சிறு பிள்ளைகள் இதை புரிந்து கொள்ள மாட்டார்கள், ஆனால் வயது வந்தவர்கள் புரிந்துகொள்ள, சிலவற்றை இங்கு நான் கூற வேண்டும். கிறிஸ்து இயேசு மரியாளின் வயிற்றில் உருவாகிக் கொண்டிருந்தபோது, உபத்திரவம் தொடங்கினது. அது உண்மை. அது உண்மை. அப்பொழுது அவளுக்கு உபத்திரவம் தொடங்கினது. அதுவே உங்களுக்கும் சம்பவிக்கும். காலத்தியர் 1, இல்லை. கலாத்தியர் 4:19, ''கிறிஸ்து (மகிமையின் நம்பிக்கை) உங்களிலே உருவாகும்போது'' என்றுரைக்கிறது. கிறிஸ்து உங்களில் உருவாகும்போது, நீங்கள் மரித்து, கிறிஸ்து உங்களில் உயிர்பெறும் போது, உபத்திரவம் தொடங்குவதைக் கவனியுங்கள். கிறிஸ்து உங்களில் உருவாகும்போது, எல்லா பக்கங்களிலிருந்தும் தொல்லைகள் ஏற்படுவதையும், பிசாசு ஆத்திரத்துடன் செயல்படுவதையும் கவனியுங்கள். 53கிறிஸ்து மரியாளில் உருவாகிக் கொண்டிருந்தபோது, ஜனங்களாகிய நீங்கள் எல்லோரும்... ''என்னும் ராஜாவின் கட்டளை உடனே பிறந்தது. அவளில்.... கிறிஸ்து அவளில் முழு குழந்தையாக வளர்ந்து, அவள் பிரசவிக்கப்போகும் இந்த நேரத்தில், அந்த பெரிய உபத்திரவம் நேர்ந்தது. குழந்தை நீண்ட காலமாக கர்ப்பத்தில் உருவாகிக் கொண்டு வந்தது. ஆனால் கடைசி நாட்களில் அந்த முழுமை, தேவத்துவத்தின் பரிபூரணம், கிறிஸ்துவின் பரிபூரணம் அவருடைய ஜனங்களின் மத்தியில் வெளிப்படும்போது, இது வருகிறது. அவர் அவ்வாறு கூறியுள்ளார், அவர் தமது வார்த்தையில் அதை வாக்களித்துள்ளார். பாருங்கள். அந்த பரிபூரணம் வரும்போது, அவர் வாக்களித்துள்ள வழக்கத்திற்கு மாறான காரியங்கள் சம்பவிக்கத் தொடங்குகின்றன. அதன் காரணமாகத்தான், நமது மகத்தான சமுதாய வாழ்க்கையும், மற்றவைகளும் இதை புரிந்து கொள்ளமுடியவில்லை. அது அவர்களுக்கு புத்தியீனமாய் உள்ளது. இப்பொழுது கவனியுங்கள், அவர்கள் உலக சபைகளின் ஆலோசனை சங்கம் ஒன்றை அமைத்துக் கொண்டிருக்கின்றனர், பாருங்கள். சபையானது தன் கால்களில் எழுந்து நின்று, இயற்கைக்கு மேம்பட்டது கிரியை செய்யத் தொடங்கும்போது, அவர்கள் ஒரு குழுவுக்குள் சென்றுவிட்டனர். இந்த காரியத்தை நிறுத்த அவர்கள் முயல்வார்கள், அன்று இருந்தது போலவே இன்றும். 54பீனிக்ஸில் நான் சென்ற சனிக்கிழமை கூறியது போன்று, ஜனங்கள் வரக்கூடாதபடிக்கு, பெலிஸ்தியர் பெத்லகேமை சுற்றிலும் படைகளை நிறுத்தியுள்ளனர். உலக சபைகள் ஆலோசனை சங்கம் மூலம் ஜனங்கள் வந்தாலொழிய, அவர்களால் வரமுடியாது. ஓ, அவர்கள் தண்ணீர் தேங்கி நிற்கும் தொட்டிகளுக்கு அவர்களைக் கொண்டு செல்வார்கள், பெத்லகேமின் புதிய தண்ணீர் ஊற்றண்டை அல்ல. அல்லவே அல்ல. இப்பொழுது நாம் கவனிக்கிறோம். கிறிஸ்து உருவாகிக் கொண்டிருந்தபோது, ராஜா தன் கட்டளையை பிறப்பித்தான். அவர்களை சற்று நேரம் எடுத்துக் கொண்டு, அவர்களைப் பார்ப்போம். நாம் முடிப்பதற்கு முன்பு, அவர்களை சற்று ஆராய்வோம். யோசேப்பு, ''மரியாளே, அன்பே, அந்த கொடிய ராஜா!'' என்று கூறுவதை என்னால் காணமுடிகிறது. அவள், ''அன்பே, கேளுங்கள். அவருடைய நாமம் 'இயேசு' என்றழைக்கப்படும். அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்று பரிசுத்த ஆவியானவர் என்னிடம் கூறினார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். யோசேப்பே, அன்பே, என்ன நேர்ந்தாலும், ராஜா என்ன கூறினாலும், அந்த சிறு கோவேறு கழுதையின் மேல் உட்கார்ந்து கொண்டு என்னால் பிரயாணம் செய்யமுடியும். பாறைகள் நிறைந்த மலைகள் கடந்து நாம் அநேக மைல்கள் செல்ல வேண்டும். நமக்கு சிறு உதவி தேவைப்பட்டால், பிரயாணத்தில் அநேகர் இருப்பார்கள். ஏனெனில் நமது குடும்பம் மாத்திரம் பிரயாணம் செய்யவில்லை. நம்மைப்போன்று மற்றவர்களும் கஷ்டப்பட்டு, வழியில் சென்று கொண்டிருப்பார்கள். மற்ற கூட்டத்தாருடன் நாமும் மலையின் மேலேறி பெத்லகேமுக்குச் சென்று விடலாம்'' என்று கூறியிருப்பாள். ஏனெனில் நாசரேத்திலிருந்து அவர்கள் மலையைக் கடந்து வந்தார்கள். 55அவன் அந்த சிறு கழுதைக்கு அன்று சற்று அதிகமாக வைக்கோலும் ஓட்ஸ் தானியமும் கொடுத்திருப்பான். ஏனெனில் அந்த பெண் - கனமாயிருந்தாள். எனவே அவன் அவளை கோவேறு கழுதையின் மேல் உட்கார வைத்து, ஒரு துருத்தி தண்ணீரும், சில பிஸ்கட்டுகளையும் போட்டுக் கொண்டு, கையில் தடியை எடுத்துக் கொண்டு சென்றான். அவர்கள் பிரயாணம் மேற்கொண்ட பாதையில் இந்த சிறு கோவேறு கழுதை தள்ளாடி விழுகிறது. ஓ, அந்த சிறிய மிருகம் சுமந்து செல்வதை பாருங்கள்! அது சுமந்து செல்லும் பாரம் என்னவென்று பாருங்கள்! அது கிறிஸ்துவை தன் பிறப்பிடத்திற்கு சுமந்து செல்கின்றது. இந்த சிறு பெண் பிரசவ வேதனையினால் அவதியுற்று, அந்த சிறு கோவேறு கழுதையின் பிடரி மயிரைப் பிடித்துக்கொண்டு, அவனுடன் பேசிக் கொண்டே பாதையில் பிரயாணம் செய்கிறாள். அவர்கள் நாள் முழுவதும் பிரயாணம் செய்வதை என்னால் காணமுடிகிறது. அவர்கள் சற்று நிற்பார்கள், அவன் அவளை இளைப்பாறச் செய்வான். “அன்பே, அதிக களைப்பாயிருக்கிறாயா?'' “இல்லை, அன்பே. நான் நன்றாகவே இருக்கிறேன் நான் நன்றாகவே இருக்கிறேன். இன்னும் சிறிது நேரம் பிரயாணம் செய்யலாமா?'' “வேண்டாம், அன்பே. இங்கு உட்கார்ந்து கொள்.'' அவன் அவளை கழுதையின் மேலிருந்து இறக்கி, சற்று நேரம் இளைப்பாறச் செய்து, அவளுக்கு குடிக்கத் தண்ணீரும். தின்ன ஒரு சிறு 'சான்ட்விச்'சும் கொடுத்து, மறுபடியும் கழுதையின் மேல் ஏற்றியிருப்பான். 56பிறகு இருட்டாகத் தொடங்குகிறது. பயணிகளுக்கு அவளைக் காட்டிலும் வேகமாக பயணம் செய்யமுடிந்தது. அவர்கள் குதிரை பூட்டிய வாகனங்களில் அவளைக் கடந்து சென்றபோது, அதனால் எழுந்த தூசியை அவள் சுவாசிக்க வேண்டியிருந்தது. அவள் இருந்த நிலைமையில் அவள் மெள்ள பயணம் செய்ய வேண்டியிருந்தது. தாய்மை பருவத்திலுள்ள ஒருத்தியை அந்த நிலையில் அங்கு அனுப்புவதென்பது என்ன ஒரு கொடூரமான செயல்! இந்த சிறு நாடகத்திலே, அவர்கள் மலையின் உச்சியை அடைவதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. பெத்லகேம் ஒரு பள்ளத்தாக்கில் உள்ளது. பெத்லகேமுக்கு மேற்கே மலையுள்ளது. அந்த மலையில் தான், சிறு நடைபாதை வருகிறது. நான் கூறிக்கொண்டிருக்கும் இந்த நாடகத்தில், அவர்களை என்னால் இப்பொழுது பார்க்கமுடிகிறது. இருட்டாகி விடுகிறது. யோசேப்பு தன் தடியில் பாதையைத் தடவிக் கொண்டே அவனால் இயன்றவரை குறுக்குப் பாதையில் செல்ல முயல்கிறான். வாகனங்கள் செல்ல வேண்டிய பாதை வளைந்து செல்லுமானால், சீக்கிரம் செல்வதற்கும், தூசியிலிருந்து விடுபடவும் அவன் தன் மனைவியுடன் குறுக்குப் பாதையில் செல்கிறான். நட்சத்திரங்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. 57சிறிது நேரம் கழிந்து அவன் மலையின் உச்சியை அடைகிறான். அங்கிருந்து அவர்கள், தாங்கள் பிறந்த பட்டினமாகிய பெத்லகேமை - அங்கு எரிந்து கொண்டிருக்கும் விளக்குகளை - காண்கிறார்கள். அங்கு அநேகர் இருந்தனர். அங்கிருந்த இடங்களில் ஜன நெருக்கம் இருந்தது. ஜனங்கள் வெளிப்புறத்தில் தரையிலும் வயல் வெளிகளிலும் - உறங்கிக் கொண்டிருந்தனர். அதை கண்டதும், யோசேப்பின் மனதில் முதன்முறையாக எழுந்த கேள்வி: “தங்க இடம் கிடைக்காவிட்டால் என்ன செய்வேன்? ஒருக்கால் இன்றிரவு குழந்தை பிறக்கலாம். நாள் முழுவதும் அவளுக்கு பிரசவ வேதனை இருந்திருக்கிறது. இன்றிரவு குழந்தை பிறக்குமானால் என்னவாகும்?'' 58அவன் வியந்து கொண்டே, அங்கு நின்று கொண்டு பள்ளத்தாக்கை நோக்கினான். அவன் கண்கள் பக்கவாட்டில் நோக்கின. அப்போது அவன் ஒரு வினோதமான காட்சியைக் கண்டான். உங்களுக்குத் தெரியுமா, சாதாரணமாக துன்ப நேரத்தில் தான், இயற்கைக்கு மேம்பட்ட சம்பவங்கள் நிகழ்கின்றன. அவன் பார்த்தபோது, ஒரு நட்சத்திரத்தைக் கண்டான். அவ்வளவு பெரிய நட்சத்திரத்தை அவன் அதற்கு முன்பு பார்த்த ஞாபகமில்லை. அது மிகவும் தாழமட்டத்தில் காணப்பட்டது. அது பெத்லகேமின் மேல் தொங்கிக் கொண்டிருந்தது. அவன் பாறையின் மேல் மரியாளை உட்கார வைத்து சிறிது நேரம் இளைப்பாறச் செய்து கொண்டிருந்தான். அவன் நிமிர்ந்து நட்சத்திரத்தைப் பார்த்து விட்டு, அவள் பக்கம் திரும்பி, “அன்பே, அதை கவனித்தாயா?'' என்றான். அவள் அங்கு உட்கார்ந்து, புன்னகை புரிந்து கொண்டு, அதைப் பார்த்தபோது, அவளுடைய அழகான, கருமை நிறக் கண்களில் அதன் பிரதிபலிப்பை அவன் கண்டான். அவன், ''அன்பே, அது வினோதமாயுள்ளது அல்லவா?'' என்றான். அவள், “யோசேப்பே, தேனே, சூரியன் மறைந்த போதே அதை நான் பார்த்து விட்டேன். அப்பொழுது முதல் அந்த நட்சத்திரத்தை நான் கவனித்து வருகிறேன். ஏதோ ஒன்று நடக்கப்போகிறதென்று, இன்றிரவு எனக்கு வினோதமான ஒரு உணர்ச்சி ஏற்பட்டுள்ளது'' என்றாள். நல்லது, அது வழக்கமாக அப்படித்தான், உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு வினோத உணர்ச்சி உண்டாகின்றது. அவள் அந்த நட்சத்திரத்தை கவனித்தாள். யோசேப்பும் கூட; அந்த சிறு கோவேறு கழுதை இளைப்பாறி சுவாசித்துக் கொண்டிருந்தது. அவர்கள் நட்சத்திரத்தை கவனித்தார்கள். அது வினோதமாக நடந்து கொண்டது. அது மற்ற நட்சத்திரங்களைப் போல் நடந்து கொள்ளவில்லை. அது தவித்துக் கொண்டிருப்பதைப்போல் காணப்பட்டு, நகர்ந்து கொண்டிருந்தது. அது ஏதோ ஒன்று நிகழ்வதற்காக காத்துக் கொண்டு, அதை எதிர் நோக்கிக் கொண்டிருந்தது. இந்த தம்பதிகள் பாறையின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்க நாம் ஒரு நிமிடம் விட்டுவிடுவோம். 59இப்பொழுது நமது சிந்தையை நூற்றுக்கணக்கான மைல்கள் தூரத்திலுள்ள கிழக்கு தேசத்திற்கு செலுத்தி, இந்தியாவிலுள்ள சாஸ்திரிகளைப் பார்ப்போம். அன்றிரவு, அவர்களுடைய வழக்கப்படி, அவர்களெல்லோரும், ஒரு நட்சத்திரம்..... சூரியன் மறைந்தபோது, நட்சத்திரங்கள் தோன்றின. அவர்கள் மலையின் மேலேறி ஒரு கோபுரத்துக்குள் சென்றனர் - வான மண்டலத்தை கூர்ந்து கவனிக்கும் ஒரு வினோதமான கோபுரம். அவர்கள் தொழுது கொள்ளவும். ஆராய்ச்சி செய்யவும் அங்கு சென்றனர். அவர்கள் நட்சத்திரங்களின் மூலமாக நேரத்தை அறிந்தனர். அவர்கள் சம்பவங்களை ஆராய்ந்தனர். வல்லரசுகளின் வீழ்ச்சி, தேசங்களின் வீழ்ச்சி, ராஜ்யங்களின் வீழ்ச்சி போன்றவைகளை அவர்கள் ஆராய்ந்தனர். அவர்கள் அதைக்குறித்து ஆலோசித்து விவாதிப்பார்கள். அவர்கள் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் அறிந்திருந்தனர். நாம் வேதத்தை அறிந்திருக்கிறது போல அவர்கள் அதை அறிந்திருந்தார்கள். நட்சத்திரங்களின் ஒவ்வொரு அசைவும் ஒரு அர்த்தத்தை கொடுத்தது. 60தேவன் பூமியில் தமது கிரியைகளை செய்வதற்கு முன்பு அவைகனை வானங்களில் வெளிப்படுத்துகிறார் என்று உங்களுக்குத் தெரியும். போதகர்களுக்கு அது தெரியும். அவர்கள் அங்கிருந்து கொண்டு நட்சத்திரங்கனை கவனித்துக் கொண்டிருந்தனர். நட்சத்திரங்கள் நகரும்போது, அவர்கள் உடனே வேதத்தை ஆராய்ந்து, அது என்னவென்று கண்டுபிடிப்பார்கள். ''நீங்கள் வேதம் என்றா சொல்கிறீர்கள்?'' ஆம், வேதம்தான். அவர்கள் சாஸ்திரிகள். அவர்கள் முகம்மதியர்கள். அவர்கள் பழைய மேதிய - பெர்சியர் சந்ததியில் தோன்றியவர்கள். முகம்மதியர்கள் அந்த சந்தததியிலிருந்து வந்தவர்கள். நம்மெல்லாருக்கும் அது தெரியும். 61கவனியுங்கள், அவர்களுக்கு அங்கே ஒரு அதிகாரி இருந்தான். நீங்கள் அதைப் படிக்க விரும்பினால், அது தானியேல் 2:43 (தானி 2:48 - தமிழாக்கியோன்). தீர்க்கதரிசியாகிய தானியேல் தான், அவர்கள் பாபிலோனிலிருந்த போது, அவர்களுக்கு அதிகாரியாக இருந்தான். அது முற்றிலும் உண்மை. தானியேல் அவர்களுடைய தலைமை தீர்க்கதரிசி. அவன் அவர்களுக்கு அதிகாரியாயிருந்தபடியால், தேவனுடைய காரியங்களைக் குறித்த அனைத்தும் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தான். கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் மலையிலிருந்து பெயர்ந்து உருண்டு வந்து, உலகிலுள்ள புறஜாதி ராஜ்யங்கள் எல்லாவற்றையும் நொறுக்கிப் போட்டு, அது வளர்ந்து பூமியெல்லாம் நிரப்புமென்று அவர்களிடம் கூறினான். அவன் கூறினது உங்களுக்கு ஞாபகமிருக்கும். 62இந்த சாஸ்திரிகள் அவிசுவாசிகள் அல்ல. இல்லை, ஐயா. அவர்கள் விசுவாசிகள். அவர்கள் ஒன்றான மெய்த்தேவனை விசுவாசித்தனர். அது உண்மையென்று நாமறிவோம், வேதம் அவ்வாறு கூறுகின்றது. அதை படிக்க விரும்பினால் நீங்கள் அப். 10: 35ல் படிக்கலாம். அதில், “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல, எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனை அவர் கனப்படுத்துகிறார்'' என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் சத்தியத்தில் அப்படியே இணைந்து இல்லை. ஆனால் நாம் விசுவாசிக்கும் அதே தேவனை அவர்களும் விசுவாசித்தனர். முகம்மதியர்கள் நாம் விசுவாசிக்கும் அதே தேவனையே விசுவாசிக்கின்றனர். 63முகம்மதி குரு பெரிய மணி ஒன்றை எடுத்து அதை அடித்து, ''ஜீவனுள்ள மெய்த்தேவன் ஒருவரே, முகம்மது அவருடைய தீர்க்கதரிசி'' என்று கூறுவதை நான் அநேகமுறை நின்று கொண்டு பார்த்திருக்கிறேன். நாம், ஜீவனுள்ள மெய்த்தேவன் ஒருவரே, இயேசு அவருடைய குமாரன் என்று விசுவாசிக்கிறோம். பாருங்கள்? தேவனுக்கு ஒரு குமாரன் இருப்பது என்பது தூரமாயிருப்பதாக என்று ஒரு முகம்மதியன் சொல்லுகிறான். அவர் ஆவியாக இருக்க வேண்டுமென்று எண்ணுகிறான், பாருங்கள். எனவே, அவன், “ஜீவனுள்ள மெய்த்தேவன் ஒருவரே, முகம்மது அவருடைய தீர்க்கத்தரிசி'' என்கிறான். இஸ்மவேலின் புத்திரராகிய அவர்கள் இன்னமும் அந்த ஒன்றான மெய்த்தேவனை விசுவாசிக்கின்றனர். 64நாம் கவனிக்கிறோம், இந்த முகம்மதியர்கள் அதை ஆராய்ந்து படித்தபோது; அவர் முகம்மதியர்களாயிருந்த போதிலும், சாஸ்திரிகள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் நட்சத்திரங்களின் போக்கை கவனித்து வந்தனர். அவர்கள் இரவில் தீ மூட்டுவார்கள், அது பரிசுத்த அக்கினி. இரவில் எரியும் அந்த பரிசுத்த அக்கினியின் மூலம் அவர்கள் தங்கள் தேவனுக்கு பணிவிடை செய்தனர். அவர்கள் நட்சத்திரங்களை கவனித்து, தங்கள் தேவனைத் தொழுது கொண்டனர். சூரியன் மறைந்த பிறகு ஒவ்வொரு இரவும் அவர்கள் மேலே ஏறிச்சென்று, இந்த காரியங்களைக் குறித்து ஆராய்ந்தனர் - நாம் கூட்டங்களில் ஒன்று கூடி வேதாகமத்தை ஒவ்வொரு வார்த்தையாக ஆராய்ச்சி செய்வதுபோல். அவர்கள் நட்சத்திரங்களின் ஒவ்வொரு அசைவையும் அறிந்திருந்தனர். 65ஒரு இரவு அவர்கள் மேலே ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது, நட்சத்திரங்களின் மத்தியில் ஒரு அந்நியர் விஜயம் செய்தது நடுக்கத்தை விளைவித்தது. அந்த நட்சத்திரத்தை அக்பர்கள் முன்பு கண்டதேயில்லை. அதைக்குறித்து அவர்கள் ஒன்றுமே அறிந்திருக்கவில்லை. எனவே அவர்கள் நடுக்கமுற்றதில் வியப்பொன்றுமில்லை. இரவு முழுவதும் அவர்கள் அதை கவனித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதைக்குறித்து என்ன செய்வதென்றே அவர்களுக்குத் தெரியவில்லை. என்னே, அது ஒரு அந்நிய நட்சத்திரம். அந்த நட்சத்திரக் கூட்டத்துக்கு மத்தியில் ஒரு நட்சத்திரம் தொங்கிக் கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர், அது ஒரு அந்நிய நட்சத்திரம், ஒரு அதிசயக்காட்சி. அதைப்போன்ற ஒன்றை அவர்கள் கண்டதில்லை. எனவே, இதைக்குறித்து அறிந்து கொள்ள, அவர்கள் வேகமாக ஆராயத் தொடங்கினார்கள். அவர்களுடைய சொந்த நூல்களில் அவர்கள் ஒன்றுமே கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அவர்கள் தானியேலின் புத்தகத்துக்குச் சென்று ஆராய்ந்தபோது, ''ஒரு கல் வரப்போகின்றது, யாக்கோபின் நட்சத்திரம் உதிக்கும்'' என்பதை கண்டு கொண்டனர். ஏதோ ஒன்று நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர். அவர்கள் அதைக்குறித்து ஒருமித்து விவாதித்து, ஜெபம் செய்துவிட்டு, உறங்கச் சென்றிருப்பார்கள். இராஜாதி ராஜா பூமியில் பிறந்தார் என்று அன்றிரவு அவர்கள் சொப்பனம் கண்டிருக்க வேண்டும். 66அண்மையில் செய்தித் தாளில் சாஸ்திரிகளை குறித்து வெளியான செய்தியில், அந்த மூன்று நட்சத்திரங்களும் ஒரே வரிசையில் வந்து ஒரு நட்சத்திரமான போது, மேசியா பூமியில் தோன்றினார் என்று எழுதப்பட்டிருந்தது. உண்மையில் அவர்கள் தூரத்திலிருந்த யூதர்கள் என்றும், அவர்கள் வான சாஸ்திரம் பயின்றிருந்தனர் என்றும், அவர்கள் அதைக் கண்டபோது, இயேசு எங்கோ பிறந்திருக்க வேண்டுமென்று அறிந்து கொண்டார்களென்றும், அது எந்த இடமென்று அவர்கள் குறிப்பாக அறியாததனால், என்ன செய்ய வேண்டும், எப்படி, யார் செல்ல வேண்டும் என்பதைக் குறித்து சீட்டு போட்டார்கள் என்றும் எழுதபட்டிருந்தது. எல்லோருமே போக வேண்டுமென்று விரும்பினர். நான் சற்று முன்பு கூறினது போல, மூன்று என்பது சாட்சியின் எண்ணிக்கை. திரும்பி வந்து அது உண்மையாவென்று சாட்சியாக அறிவிக்க, அவர்கள் வழக்கமாக கூட கொண்டு செல்வார்கள். அவர்கள் என்ன செய்தனர்?அவர்கள் தங்கள் செல்வங்களை மூட்டை கட்டிக் கொண்டனர். தங்கள் காணிக்கைகளை அவருக்கு கொண்டு செல்ல மூட்டை கட்டிக் கொண்டனர். 67சகோதரனே, சகோதரியே, நம்மிடம் உள்ளதை நாம் கிறிஸ்துவுக்கு கொடுக்க வேண்டியதாய் இருக்கும்போது, நாம் நமக்கு எவ்வளவு பெற்றுக் கொள்ளமுடியும் என்று காண எப்பொழுதும் முயற்சி செய்கிறோமா என்று இன்றிரவு வியப்புறுகிறேன். பாருங்கள், நாம் எவ்வளவு சாமர்த்தியமாக இருக்கமுடியும், மற்றவனை நாம் எப்படி மாற்றலாம் என்று கற்றுக் கொள்ளாமல், நம்மிடம் உள்ள எல்லாவற்றையும் அவரிடம் எப்படி சமர்ப்பிப்பது என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். “தேவன் எனக்கு சொப்பனம் தருவதா, அதை நான் நம்பவே மாட்டேன்'' என்று சிலர் கூறக் கேட்டிருக்கிறேன். ''எனக்கு தெய்வீக சுகமளித்தலில் நம்பிக்கை கிடையாது.'' அன்றொரு நாள் அதைக்குறித்த சான்றை ஒருவனிடம் காண்பித்துக் கொண்டிருந்தேன். அப்பா, “எத்தனை மருத்துவர்கள் தங்கள் பெயர்களை கையொப்பமிட்டாலும் எனக்குக் கவலையில்லை. நீங்கள் எவ்வளவுதான் சொன்னாலும், அது என்னவாயிருந்தாலும், இன்னும் அதிகமாக கூறப்பட்டாலும், அதை நான் நம்பமாட்டேன், நான் நம்ப மாட்டேன்'' என்றான். நான், ''நிச்சயமாக நீ நம்பமாட்டாய். அது உனக்காக இல்லை'' என்றேன். தெய்வீக சுகமளித்தல் அவிசுவாசிகளுக்கு அனுப்பப்படவில்லை. அது விசுவாசிகளுக்கு அனுப்பப்பட்டது. கிறிஸ்து விசுவாசிகளுக்கே. பரிசுத்த ஆவியானவர் விசுவாசிக்கிறவர்களுக்கு மாத்தரமேயன்றி, அவிசுவாசிகளுக்கு அல்ல. அது அவர்களுக்காக அல்ல அது அவர்களைக் குருடாக்கும் இடறல் கல்லாய் உள்ளது. எப்பொழுதும் அவ்வாறே இருக்கும், அது அவ்வாறே இருந்து வந்துள்ளது அது அவிசுவாசிகளுக்கு அல்ல. அது விசுவாசிக்கிறவர்களுக்கே அதுதான். 68இந்த ஆட்கள் விசுவாசிகள் என்று நாம் காண்கிறோம். அவர்கள் கண்டுபிடிக்க விரும்பினார்கள். அவர்களுக்கிருந்த எல்லாவற்றையும் அவர்கள் மூட்டை கட்டி எடுத்துக்கொண்டார்கள், அது என்னவென்றும், உண்மையாவென்றும் அவர்கள் கண்டு கொள்ள விழைந்தனர். அவர்கள் நீண்ட பிரயாணம் செய்ய பேண்டியிருந்தது. அவர்கள் தங்கள் ஐசுவரியம் அனைத்தும் - பொன், வெள்ளைப்போளம், தூபவர்க்கம், அவர்களுக்கிருந்த அனைத்தும் - ஒன்றாக சேகரித்து மூட்டைக்கட்டிக் கொண்டு, இந்த ராஜாவை கண்டுபிடிக்க ஆயத்தமாயினர். அவர்கள் தங்கள் காணிக்கைகளுடன் பயணத்தை தொடங்கினர். கவனியுங்கள், இந்த ராஜாவைக் கண்டுபிடிப்பதற்கு, தேவனால் அளிக்கப்பட்ட பரலோக அடையாளத்தை பின்பற்றி சென்றனர். மனிதனால் ஏற்படுத்தப்பட்ட வேத சாஸ்திரத்தையல்ல. அவர்கள் அதை வார்த்தையில் கண்டனர். அது அங்கு இருக்க வேண்டுமென்று கருதப்பட்டது. அவர்கள் அந்த பரலோக அடையாளத்தை பின்பற்றி சென்றனர். 69அவர்களுக்கிருந்த அந்த துணிச்சல் மனிதர்களுக்கு இருக்குமானால்! அவர்களுக்கிருந்த புரிந்துகொள்ளும் தன்மை இவர்களுக்கு இருக்குமானால்! தேவன் நமக்கு ஏதாவதொன்றை அளித்து அது வேத பிரகாரமாக இருக்குமானால், அதைப்பற்றிக் கொள்ளுங்கள்! ''பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்று ஒன்றில்லை'' என்று மனிதர் கூறுகின்றனர். பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இருக்கின்றது. பெந்தெகொஸ்தே நாளன்று அது வந்தவிதமாகவே இன்றைக்கும் வருகிறது. தெய்வீக சுகமளித்தல், தேவனுடைய வல்லமை! ''அது எடுபட்டுவிட்டது'' என்று யாருமே வேதத்திலிருந்து காண்பிக்க முடியாது''. தேவன் அதைஎப்பொழுது சபைக்கு அளித்தார் என்று நான் வேதத்தில் உங்களுக்கு காண்பிக்க முடியும். அது எப்பொழுது எடுக்கப்பட்டது என்பதைக் குறித்த வேதவசனத்தை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள் பார்க்கலாம்! அப்படிப்பட்ட வசனம் அங்கில்லை. 70ஏனெனில், ''அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். வாக்குத்தத்தமானது...'' பெந்தெகொஸ்தே நாளன்று பேதுரு, “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்ககள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது'' என்றான். (அப்.2:38-39). வரவழைக்கும் யாவருக்கும்! அன்றிருந்தது போலவே பரிசுத்தஆவி இன்றும் உத்தம இருதயமுள்ளவர்களுக்கு மாறாததாய் உள்ளது. அப்படி இல்லையென்றால் நீங்கள் தேவனை விசுவாசிப்பது அசாதாரணமான செயலா என்ன? பவுல் அகிரிப்பாவிடம், “தீர்க்கதரிசிகள் உரைத்ததை உம்மால் மறுதலிக்க முடியுமா?'' என்று கேட்டான். 71இயேசுவே கூறினதை. வேதாகமம் (அது கிறிஸ்து' அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தை) வெளிப்படையாக கூறுவதை உங்களால் மறுக்க முடியுமா? வார்த்தை உங்களில் நிலைத்திருந்தால், நீங்கள் வார்த்தையினால் அபிஷேகம் பண்ணப்பட்ட நபராகி விடுகின்றீர்கள். “நீங்கள் என்னிலும், என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்” (யோவான் 15:7). அது கிறிஸ்து உங்களுக்குள் வாசம் செய்து, இக்காலத்துக்குரிய வார்த்தையினால் உங்களை அபிஷேகம் செய்வதாகும் - அவர்கள் எந்த காலத்தில் வாழ்ந்திருந்தாலும். தேவன் தமது வார்த்தையை காலங்களுக்குப் பகிர்ந்து கொடுத்தார். ஒவ்வொரு முறையும் அது வரும்போது, சபைகள் அச்சமயம் குழப்பமுற்று இருந்தன. அப்பொழுது தேவன் யாராகிலும் ஒருவரை தமது ஆவியை அனுப்பி அபிஷேகித்து, அவர் கூறின விதமாகவே வார்த்தை கிரியை செய்யும்படி செய்கிறார். நிச்சயமாக. இந்நாளுக்காகவும் வார்த்தை தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்து நேற்று இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று நிருபிக்கவும், பிரகாசிக்கும் வெளிச்சமாக இருந்து அவிசுவாசிகளின் கண்களை குருடாக்கவும், யாரையாகிலும் ஒருவரை கண்டுபிடித்து பரிசுத்த ஆவியினால் அபிஷேகம்பண்ண தேவன் காத்துக் கொண்டிருக்கிறார் என்பது அசாதாரணமல்ல அவிசுவாசிகள் தேவ தூஷணம் உரைத்து, நியாயத்தீர்ப்பை தங்கள் மேல் வருவித்துக் கொள்வார்கள். ஏனெனில் தேவனுடைய பிரமாணம் நீதியுள்ளது. அவருடைய நீதியின் மூலமாகவே நியாயத்தீர்ப்பு வரமுடியும். அப்பொழுது அவர் உலகத்தை ஆக்கினை தீர்ப்புக்குட்படுத்தி, அவர் சோதோமியருக்கு செய்ததுபோல, இதை அக்கினி ஜுவாலைக்கு இரையாக்க முடியும். இப்பொழுது கவனியுங்கள். 72அவர்களுடைய பிரயாணத்தில், அவர்கள் தேவனால் அளிக்கப்பட்ட அடையாளத்தை பின்தொடர்ந்தனர் என்று நாம் காண்கிறோம். அவர்கள் கவனித்தனர். அவர்கள் யாருடைய வார்த்தையையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் பேராயரிடமோ, அல்லது வேறு யாரிடமோ சென்று ஆலோசனை கேட்கவில்லை. தேவன் அவர்களுக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தார். அவர்கள் அது உண்மையென்று இங்கு கண்டனர். அதை பின் தொடர்ந்து சென்றனர், அது அவர்களை வழி நடத்தினது. அது வேதத்தில் முன்னுரைக்கப்பட்ட ஒன்று. அது வருமென்று அவர்கள் அறிந்திருந்தனர், அவர்கள் அதை பின்தொடர்ந்தனர். அது என்ன? அவர்கள் கையை ஆட்டி, “சகோதரரே, நாங்கள் ஒருநாள் திரும்பி வந்து, உங்களுக்கு செய்தியைக் கொண்டு வருவோம். ஏனெனில் அது உண்மையென்று நாங்கள் அறிவோம்” என்று கூறி விடைபெற்று செல்வதை என்னால் காண முடிகிறது. அவர்கள் மலையைக் கடந்து. டைக்ரீஸ் நதியைக் கடந்து சமவெளியைக் கடந்து, ஒவ்வொரு நாளும் அநேக மாதங்களாக அந்த நட்சத்திரத்தைக் கவனித்து அதை பின்தொடர்ந்து சென்றனர். 73பகல் வேளையில் ஒருக்கால் அவர்கள் படுத்துக்கொண்டு உறங்கி, ஓய்வு எடுத்துக் கொண்டு ஒருவர் பக்கம் மற்றவர் திரும்பி ஒருவருக்கொருவர், “ஓ, நாம் அங்கு அடையும்போது, அது அற்புதமாயிருக்கும்; இந்த பரலோக பிரகாசம், இந்த பரலோக வெளிச்சம், நாம் காணும் இயற்கைக்கு மேம்பட்ட இந்த வெளிச்சம்!'' என்று கூறியிருப்பார்கள். ஆமென்! எனக்கு மூளை கோளாறு ஏற்பட்டு விட்டதென்று நினைக்கிறீர்களா? இல்லை. நாம் சிந்தித்துக் கொண்டிருக்கும் இந்த பரலோகப் பிரகாசத்தை, இந்த வெளிச்சத்தை கவனியுங்கள். வேறுயாரும் அதைக் காணவில்லை என்று நினைவில் கொள்ளுங்கள். அது ஒவ்வொரு வானநிலைஆராய்ச்சி நிலையத்தையும், ஒவ்வொரு சாஸ்திரியையும் கடந்து வந்தது. அது அவர்களுக்காக அனுப்பப்பட்டது. அவர்கள் அதை கண்டார்கள் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் அவர்கள் கண்டார்களென்று வேதம் கூறுகின்றது. வேறு யாரும் அதைக் காணவில்லை. 74பவுல் கண்ட அந்த ஒளியை வேறு யாரும் காணவில்லை, அதே காரியம். அவன் தமஸ்குவுக்குப் போகும் வழியில் அது அவனைக் கீழே விழத்தள்ளியது. அது பவுலுக்கு மாத்திரம் அருளப்பட்டது. யோவானைத் தவிர வேறு யாருமே பரிசுத்த ஆவியானவர் ஒளி வடிவில் புறாவைப்போல் இறங்கி வந்ததைக் காணவில்லை. அவன் மாத்திரமே கண்டு சாட்சி கொடுக்கிறான். அவன் கண்டான், மற்றவர்கள் காணவில்லை. அவன் கண்டான், ஏனெனில் அவன் அதை எதிர் நோக்கியிருந்தான். சாஸ்திரிகள் அதை எதிர் நோக்கியிருந்தனர்! நீங்கள் அதை எதிர்நோக்கியிருக்கும் போது, உண்மையான கிறிஸ்துமஸ் வெகுமதியை பெற்றுக் கொள்ள நீங்கள் ஆயத்தமாயிருக்கும் போது - உண்மையான கிறிஸ்துமஸ் வெகுமதி, தேவன் அளித்த கிறிஸ்து என்னும் வெகுமதி, பரிசுத்தஆவி, நீங்கள் அதை எதிர்நோக்கியிருந்தால், அதை காண்பீர்கள். அது இயேசுவைக் குறித்து சாட்சி கொடுக்க தேவனால் பரலோகத்திலிருந்து கீழே அனுப்பப்பட்ட பரலோக ஒளியாம். அவர்கள் யாருடைய வார்த்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை. பகல் நேரத்தில் அவர்கள் பொறுமையற்று இருந்தனர். அவர்கள், “ஓ, என்னால் இனியும் காத்திருக்க முடியாது. இன்னும் நாம் எவ்வளவு தூரம் செல்ல வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. நாம் ஒருக்கால் எருசலேம் வரைக்கும், அல்லது பரிசுத்த தேசமாகிய பாலஸ்தீனா வரைக்கும் செல்ல வேண்டியிருக்கும். ஏனெனில் அவர் அங்குதான் பிறப்பாரென்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது, எனவே விரைவிலோ அல்லது தாமதித்தோ அவரை நாம் கண்டுபிடிப்போம்'' என்று கூறியிருப்பார்கள். இரவு நேரம் வருகிறது. இருள் சூழ ஆரம்பிக்கின்றது. 75இருளில் தான் வெளிச்சம் பிரகாசிக்கின்றது என்று நினைவில் கொள்ளுங்கள். அந்த வழியில் தான் அதை அடையாளங் கண்டுகொள்ள முடியும். மனிதரும் கோட்பாடுகளும் ஜனங்களை தேவனுடைய வார்த்தையிலிருந்து புறம்பாக்கின இருளின் காலத்தில் நாம் எப்பொழுதாவது வாழ்ந்திருந்தால், அது இன்று தான். இந்த ஸ்தாபனங்கள் ஜனங்களை தேவனுடைய வார்த்தையைத் தவிர மற்றெல்லா காரியங்களிலும் கட்டிப் போட்டுள்ளன. அதன் விளைவாக, உலக சபைகள் ஆலோசனை சங்கத்திற்குள் நடந்து சென்று, எல்லாவிதமான அவிசுவாசிகளுடனும் தங்களை இணைத்துக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் குருடாயிருப்பார்கள். “இரண்டு பேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்து போவார்களோ?'' என்று வேதம் கூறுகின்றது (ஆமோஸ் 3:3) நம்முடைய சபைகள் அத்தகைய கதம்பத்திற்குள் சென்று கொண்டிருக்கின்றன. நிச்சயமாகவே அவர்கள் குருடாயிருக்கின்றனர். ஆனால் அப்படிப்பட்ட இருள் நேரத்தில்தான் வெளிச்சம் தோன்றுகிறது. ஒளி அப்பொழுது தான் பிரகாசிக்கிறது. அவர்கள் அதை கவனித்தனர். இரவு வந்தபோது, அவர்கள் களிகூர்ந்து, ''எங்களை வழிநடத்திக் கொண்டே செல். மேற்கு திசை நோக்கி வழிநடத்தி, இன்னமும் சென்று கொண்டேயிருந்து, அந்த பரிபூரண வெளிச்சத்துக்கு எங்களை வழிநடத்து'' என்றனர். அவர்கள் ஆறுகளைக் கடந்த போது, மணல் மேடுகளையும் கடந்து சென்று சத்தியத்தை கண்டுபிடிக்க வேண்டியதாயிருந்தது. 76கவனியுங்கள், பெத்லகேம் யூதேயாவுடன் சரியாக நேர்கோட்டில் அமைந்திருந்தது, அங்கிருந்து அவர்கள்.... அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து எருசலேம் பெத்லகேமுடன் நேர்கோட்டில் அமைந்திருந்தது. கவனியுங்கள், நீங்கள் மாத்திரம் கிரகித்துக்கொள்ள முடியுமானால், ஓ, என்னே ஒரு அடையாளம்! பெத்லகேம் இங்கு உள்ளது. எருசலேம் இங்கே மேலே உள்ளது. சாஸ்திரிகள் புறப்பட்ட இடத்திலிருந்து, அவர்கள் பெத்லகேமை அடைவதற்கு முன்பு, எருசலேமுக்கு வரவேண்டும். உங்களுக்குப் புரிகிறதா? அந்த பெரிய, மகத்தான, தானாகவே பாவித்துக் கொண்ட ஸ்தாபன தலைமை அலுவலகமாகிய எருசலேம் (ஆம், ஐயா); அங்குதான் எல்லா ஸ்தாபனங்களும் ஒன்று கூடின. அந்த மகத்தான ஆலோசனை சங்கம் அங்குதான் கூடியது, உங்களுக்குத் தெரியுமா? எனவே இந்த மனிதர்கள் இந்த நகருக்கு வந்தபோது, இது தான் சரியான இடம். யாராகிலும் இதைக்குறித்து அறிந்திருந்தால், இந்த ஒளியின் பரம ரகசியத்தைக் குறித்து நமக்கு விளக்கம் தருவதற்கு இந்த பிரதான ஆசாரியர்களே தகுதியுள்ளவர்கள். இதோ இவர்கள் வேத சாஸ்திரத்தில் பிஎச்,டி, எல்எல்.டி போன்ற டாக்டர் பட்டங்கள் பெற்றுள்ளனர். இவர்களுக்கு இதைக்குறித்து எல்லாமே தெரிந்திருக்கும். ஓ, சகோதரனே, எருசலேம் கண்களில் தென்படுகின்றது! அங்கு நாம் செல்வோம், அப்பொழுது நமக்கு விளக்கம் கிடைக்கும்'' என்று நினைத்தார்கள். அவர்கள் தெருக்களில் வேகமாக சென்றார்கள். ''நீங்கள் எங்கு செல்கின்றீர்கள்?'' ''நாங்கள் ஒரு மகத்தான செய்தியை கொண்டுள்ளோம்.'' ''அது என்ன?'' 77“யூதர்களுக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? இங்கு மேலேயுள்ள மர்ம ஒளி எதைக் குறிப்பிடுகின்றது? யார், அவர் எங்கே?'' இந்த ஐசுவரியவான்கள், அழகாக உடுத்திய ஒட்டகங்களின் மேல் ஏறிக்கொண்டு, பொன்னும் தூபவர்க்கமும் கொண்டவர்களாய், ஒவ்வொரு தெருவின் வழியாகவும், சந்தியின் வழியாகவும் சென்று, ''அவர் எங்கே? அவர் எங்கே? அவர் எங்கே?'' என்று கூக்குரலிட்டனர். ஆனால் அங்கிருந்தவர்களிடம் அதற்கான பதில் இல்லை என்பதை சாஸ்திரிகள் கண்டு கொண்டனர். இன்றைய பெரிய கூக்குரல், ''கம்யூனிஸம் நம் மேல் வந்துள்ளது'' என்பதாகும். ஓ, ஒவ்வொரு வானொலி ஒலிபரப்பும் கம்யூனிஸத்தை எப்பொழுதும் தாக்கிக் கொண்டேயிருக்கிறது. உங்களால் கம்யூனிஸத்தை நிதானித்து அறிய முடிகிறது; ஆனால் இக்காலத்தின் அடையாளத்தையோ உங்களால் நிதானித்து அறிய முடியவில்லை. இயேசு, “வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா?'' என்றார். (மத். 16:3.) எப்பொழுதுமே ''கம்யூனிஸம்! கம்யூனிஸம்!'' என்று பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அது வேறொன்றுடன் சம்பந்தப்பட்டுள்ளது என்பதை நீங்கள் கண்டு கொள்வது நல்லது. 78நாம் எந்த நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? இது சம்பவிப்பதற்கு முன்பு, தேவன் கடைசியாக காண்பிக்கப் போவதாக கூறியுள்ள அடையாளம் என்ன? அவர் கூறின காரியங்கள் எவை? இஸ்ரவேல் தன் சொந்த நாட்டில் இருக்கிறாள். அத்திமரம் துளிர் விடத் தொடங்கிவிட்டது. எல்லாமே சரியாக நேர்கோட்டில் அமைந்துள்ளதைப் பாருங்கள். சபையும் லவோதிக்கேயா நிலையையடைந்து, இயேசு அதுற்கு வெளியே நின்று கொண்டு, தமது சொந்த சபையில் புகலிடம் தேடும் அகதியாகி விட்டார் - தாவீது தன் சொந்த ஜனங்களுக்கு அகதியாகி, பெத்லகேமில் இருந்தது போல. ஒரு அகதி! கடைசி நாட்களில் கிறிஸ்து தமது சொந்த ஜனங்களுக்கு அகதியாயிருப்பார் என்று வேதம் கூறுகின்றது. நாம் வாழும் லவோதிக்கேயா சபையின் காலத்தில் “கிறிஸ்து வெளியே கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே வரமுயல்கிறார்'' என்று வெளிப்படுத்தல் 3ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. அவர் தமது சொந்த ஜனங்களுக்கு அ தியாயிருக்கிறார். 79அந்த போர்ச்சேவகர்கள் தங்கள் பட்டயங்களை கையிலெடுத்தார்கள். தாவீது சுத்தமான குடிதண்ணீருக்காக கதறினான். அவர்கள் பதினைந்து மைல்கள் நீளமிருந்த மனிதர்களை வெட்டி வீழ்த்தி, அதன் வழியாக கடந்து சென்று, அவனுக்கு குடி தண்ணீரைக் கொண்டு வந்தனர். தாவீது அதை பானபலியாக தரையில் வார்த்தான். ஆம், இன்றைய போர்ச்சேவகரே, நல்லதும் புதிதுமான பழைய பெந்தெகொஸ்தே தண்ணீரைக் குடிக்க இயேசு விரும்புகிறார். தேங்கிக் கிடக்கும் ஸ்தாபனங்களின் தண்ணீர் அவருக்கு குமட்டல் உண்டாக்குகிறது. தேவனுடைய வார்த்தையை வெளியே உருவி, அவருக்கு சுத்தமான தண்ணீர் கிடைக்கும் இடத்தை நாம் அடையும் வரைக்கும், எல்லா கோட்பாடுகளையும் மற்றவைகளையும் வெட்டி வீழ்த்திக் கொண்டு செல்வோம். தமது வார்த்தையை ஊற்றி, இந்நாளில் தமது வார்த்தையை ஜீவிக்கச் செய்வதற்காக, அவர் உண்மையோடு தொழுது கொள்ளும் ஒரு உத்தம இருதயத்தை தேடிக் கொண்டிருக்கிறார். அவர் அதை பெற்றுக்கொள்வார். அவர் ஜனங்களின் விசுவாசத்தை - பிள்ளைகளின் விசுவாசத்தை - பிதாக்களிடம் திருப்புவதாக வாக்களித்துள்ளார். அது வருமென்று மல்கியா 4 உரைக்கிறது, அது அங்கிருக்கும். கவலைப்படாதீர்கள், அது அங்கு இருக்கும். தேவன் அவ்வாறு கூறியுள்ளார். அவ்வளவுதான். கடிகாரம் சரியாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆம், ஐயா, இன்று நாம் காணும் அந்த பெரிய, இன்று நாம் காணும்.... 80கம்யூனிஸம் ஏன் வந்து கொண்டிருக்கிறது? ஏன் உலகம் அதனால் விழுங்கப்படுகின்றது? ஏன் ருஷியாவின் ஒரு சதவிகிதம்? அது மாத்திரமே கம்யூனிஸம். மற்ற தொண்ணூற்றென்பது சதவிகிதம் இன்னமும் கிறிஸ்தவர்கள். ருஷியாவின் ஒரு சதவிகிதம், உலகத்தின் மற்றபாகங்களை ஏறக்குறைய தன் ஆதிக்கத்தில் கொண்டுள்ளது - கிழக்கத்திய நாடுகளை. கம்யூனிஸம். ஏன்? அதனால் ஏன் அப்படி செய்ய முடிகிறது? அது அப்படி செய்யும் என்று வேதம் கூறுகிறது. அவர் அதற்கு பதிலை வைத்திருக்கிறார். ஆனால் பாருங்கள், நாம் அதை இதை எதிர்க்க முயல்கிறோம். நாம் கவனிப்பதற்காக தேவன் அனுப்பியுள்ள அந்த காரியத்தை நாம் காணத் தவறுகிறோம். அவர்கள்.... அவர்களுடைய உடுப்புகளில் எந்த விதமான பொத்தான்கள் வைத்து தைக்க வேண்டுமென்றும், அடுத்த கூட்டத்தின் போது, யார் முக்கிய பேச்சாளராக இருக்கவேண்டும் போன்றவைகளில் கவனம் செலுத்தி வந்தனர். 81ஆனால் இங்கேயோ ஞானிகள் பரலோக வெளிச்சத்தை கவனித்துக் கொண்டே பயணம் செய்து வந்து, ''நான் எருசலேமை அடையும் போது, நமக்கு மேலே இருந்து கொண்டு நம்மை வழி நடத்தும் இந்த தெய்வீக பரலோக வெளிச்சம் என்னவென்று என்னிடம் கூறுவார்கள்'' என்று எண்ணினர். அவர்கள் தெருக்களில் இங்கும் அங்கும் சென்று, ''அவர் எங்கே? யூதர்களுக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தை நாங்கள் காண்டோம். அவரைப் பணிந்து கொள்ள நாங்கள் வந்திருக்கிறோம். நாங்கள் பொன், தூபவர்க்கம் முதலானகைளை வைத்திருக்கிறோம். அவருக்காக நாங்கள் எல்லாவற்றையும் வைத்திருக்கிறோம். அவர் எங்கே? அவர் எங்கே? என்று கேட்டனர். அவர்களோ, யார் எங்கே என்று கேட்கிறீர்கள்? - என்ன?'' என்றார். இன்றைக்கும் அதே விதமாக உள்ளது. அவர்கள், ''அப்படி ஒன்றும் இன்று சம்பவிக்கவில்லையே என்றனர். ''ஓ சூரியன் மறையும் போது, நாங்கள் ஒரு தெய்வீக ஒளியைக் காண்கிறோம்.'' ''நான் அதை பார்க்கவில்லை'' ''கோபுரத்திலுள்ள ஜாமக்காரனைக் கூப்பிடுங்கள்'' ''நீ தெய்வீக ஒளி ஏதாகிலும் கண்டாயா?'' ''என்ன கேட்கிறீர்கள்?'' ''தெய்வீக ஒளி ஏதாகிலும்...'' “இல்லை! உங்களுக்கு என்ன நேர்ந்தது?'' பாருங்கள், அவர்களிடம் அதற்கான பதில் இருக்கவில்லை. 82இன்றைக்கும் அவர்களிடம் அது இல்லை! அவர்கள் இதை அறிந்திருக்க வேண்டும், சபைகளின் தலைவர்கள் இந்த காரியங்களைக் குறித்து அறிந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களோ இந்த காரியங்கள் என்னவென்று அறியாமலிருக்கிறனர். ஆனால் தேவன் எப்பொழுதுமே சிறுபான்மையோரிடமே கிரியை செய்கிறார். அது மிகவும் எளிமையாயிருப்பதால், அது அவர்களைக் கடந்து சென்றுவிடுகிறது. அவர்கள் அதை அறிவதில்லை. அவர் அப்படித்தான் தமது வார்த்தையை நிறைவேற்றுகிறார். அதுதான். இந்த பெரிய காரியங்களில் நாம் சிக்கிக் கொண்டிருக்கிறபடியால், நம்மால் அசைய முடிவதில்லை (தேவனே, நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தை காணத்தக்கதாக, எங்களை கட்டவிழ்த்து விடுதலையாக்கும்). தேவன் மறுபடியுமாக ஒரு சொப்பனத்தின் மூலம் கிரியை செய்யவேண்டுமானால், அவர் உங்களுக்கு இதை வெளிப்படுத்தி தரமுடியும். நிச்சயமாக, அவரால் முடியும். நாம் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்பொழுது கவனியுங்கள். ஓ! 83அந்த மர்ம ஒளியைக் குறித்த பதில் அவர்களிடம் இல்லை, அவர்களுடைய தலைமை அலுவலகத்திலும் அவர்கள் பதிலைப் பெற்றிருக்கவில்லை. இன்றைக்கும் அவர்களிடம் பதில் இல்லை. எனவே அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் தேவனுடைய வார்த்தையைக் கொண்டு வரும்படி கூறினர். அது நல்ல ஆலோசனை. அவர்கள், “நாம் தேவனுடைய வார்த்தையைத் தேடிப் பார்த்து, இவை எங்கேயுள்ளன என்று கண்டு பிடிப்போம்'' என்றனர். அவர்கள் தேவனுடைய வார்த்தையை கொண்டு வரும்படி கூறினபோது, இன்றுள்ள அநேகரைக் காட்டிலும் சாஸ்திரிகள் புத்திசாலிகள். அவர்கள் அதை பெற்றிருக்கவில்லை என்றும், அதை அவர்கள் பெற்றுக்கொள்ளப் போவதில்லையென்றும், தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில் சாஸ்திரிகள் கண்டு கொண்டனர். ஆமென். அவர் பிறக்க வேண்டிய பட்டினம் அதுவல்ல என்றும், அவர் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறக்க வேண்டும் என்றும் அவர்கள் கண்டு கொண்டனர். ஆமென். அது மிகச் சிறியதாயும், அவை எல்லாவற்றைப் பார்க்கிலும் மிகத்தாழ்வானதாயும், சிறிய இடமாக இருக்க வேண்டுமே தவிர, தன்னைப் பெரிதாக பாவித்துக் கொள்ளும் இடமல்ல. சாஸ்திரிகள் அதை விரைவில் கண்டு கொண்டனர். அவர்கள் அதை பெற்றிருக்கவில்லை என்றும், அதை அவர்கள் பெறப்போவதில்லையென்றும் தேவனுடைய வார்த்தை வெளிப்படுத்தினது. எனவே அவர்கள் அந்த குழப்பத்திலிருந்து வெளியேறினர். நாமும் அதையே செய்ய முடியமானால்! அவர்கள் சொப்பனத்தில் எச்சரிக்கப்பட்டு, அந்த குழப்பத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் அதை விட்டு சென்றனர். அவர்களுக்காக அல்லேலூயா!அவர்கள் விட்டு சென்றனர். 84அந்த குழப்பத்தை விட்டு அவர்கள் வெளியேறினவுடன் இயற்கைக்கு மேம்பட்டது மறுபடியும் தோன்றினது. பார்த்தீர்களா? அந்த காரியங்களிலிருந்து அவர்கள் தங்களை விடுவித்துக் கொண்ட பிறகு. அந்த கதம்பத்தை விட்டு அவர்கள் வெளியேறின பிறகு, அந்த பெரிய தலைமை அலுவலகம் இருந்த இடத்தில் வீண் சந்தடியும், வாக்குவாதமும் இருந்தது. எல்லா பெரிய பிரதான ஆசாரியர்களும், வேதசாஸ்திரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்களும் தங்கள் பிஎச்.டி பட்டங்களுடனும், பெரிய, உயரமான தலைப்பாகைகளுடனும் நடந்து கொண்டிருந்தனர். அதன் காரணமாக, அவர்களால் நட்சத்திரத்தை பார்த்திருக்க முடியாது. ஏனெனில் அவர்களுடைய தலைப்பாகை.... அப்படிப்பட்ட காரியங்கள் அநேகரை குருடாக்கி விடுகிறது; பிரபலமான பெயர்கள், மேதைகள் நடந்து கொண்டிருத்தல். அவர்களில் அநேகர், “நல்லது, அப்படிப்பட்ட ஒன்றுமே கிடையாது. நானூறு ஆண்டுகளாக நாங்கள் அப்படிப்பட்ட காரியத்தை கேட்டதேயில்லை. இந்த பைத்தியக்கார ஜனங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்களுக்கு சொந்தமான இந்தியாவுக்கே திருப்பி அனுப்பி விடுங்கள்'' என்றனர். 85சாஸ்திரிகள், ''என்ன? தேவனுடைய வார்த்தை உரைத்துள்ளதே, அதைக்குறித்து என்ன? அவர், 'யூதேயாவிலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார்'' என்று கூறியுள்ளாரே! நாம் தவறான இடத்துக்கு வந்து விட்டோம். இந்த விதமான காரியத்துடன் நாங்கள் சேர மாட்டோம்'' என்றனர். எனவே அவர்கள் தங்கள் ஒட்டகங்களைத் திருப்பி அதிலிருந்து வெளியேறினர். தேவன் அவர்களை ஆசிர்வதிப்பாராக. அங்கிருந்து அவர்கள் புறப்பட்டு சென்றனர். அவர்கள் அதிலிருந்து வெளியேறினவுடனே, இயற்கைக்கு மேம்பட்டது மறுபடியுமாக அவர்களில் அசையத் தொடங்கிற்று. ஓ என்னே! பிறகு, அவர்கள் இயற்கைக்கு மேம்பட்டதை பின்பற்றத் தொடங்கினர். சாஸ்திரிகள் அந்த முறைமைகளிலிருந்து வெளியேறினவுடனே, பரலோகத்திலிருந்து இயற்கைக்கு மேம்பட்ட ஒளி அவர்களுக்கு மறுபடியும் தோன்றினது. இந்த காரியங்களை விசுவாசிக்காத அவிசுவாசிகளின் கூட்டத்தில் நீங்கள் கட்டப்பட்டிருக்கும் வரைக்கும், உங்களால் காணவே முடியாது. நீங்கள் வெளவாலைப் போன்று குருடாயிருப்பீர்கள். இவை எல்லாவற்றினின்றும் உங்களை விலக்கிக் கொள்ளுங்கள். அது தாய், தந்தை, சகோதரி, சகோதரன், ஸ்தாபனம் எதுவாயிருந்தாலும். ''தன்னைத்தான் வெறுத்து என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல. கலப்பையின் மேல் கையை வைத்து பின்னிட்டுப் பார்க்கிற எவனும் உழவுக்குப் பாத்திரனல்ல.'' சகோதரனே, சகோதரியே, இதை நான் உங்களிடம் கூற விரும்புகிறேன். ஒரு கிண்மையான, சத்தியமான கிறிஸ்தவ வெளிச்சம் இன்றிரவு பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அது இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதே. எல்லாவற்றினின்றும் விடுவித்துக் கொள்ளுங்கள்! அவரே வார்த்தையாயிருக்கிறார். தேவனுடைய வார்த்தை பிழையின்றி சரியாயுள்ளது. அது தனிப்பட்ட விதத்தில் வியாக்கியானம் செய்யப்படக் கூடாது. நீங்கள், “இதுவே இதன் அர்த்தம்'' என்கிறீர்கள். 86அது என்ன கூறுகிறதோ அதுதான் அதன் அர்த்தம். ''அதை தனிப்பட்ட விதத்தில் வியாக்கியானம் செய்யக்கூடாது'' என்று வேதம் கூறுகின்றது. அது, கறுப்பை கறுப்பென்றும், வெள்ளையை வெள்ளையென்றும் கூறினால், அதுதான் அது. அதுவே முடிவானது, அதுவே முற்றிலுமானது. தேவனுடைய ஆவியால் பிறந்த ஒவ்வொரு மனிதனும் அதனுடன் இணைக்கப்பட்டிருக்கிறான். என்ன நேர்ந்தாலும், அதிலிருந்து அவனை ஒன்றுமே பிரிக்க முடியாது. அவன் வார்த்தையுடன் இணைக்கப்பட்டிருக்கிறான், ஏனெனில் அது கிறிஸ்து. கிறிஸ்துவே வார்த்தை. கிறிஸ்து அவருடைய வார்த்தையைக் குறித்து பொய்யுரைக்க முடியாது, ஏனெனில் அவரே வார்த்தையாயிருக்கிறார். நீங்கள், “அவர் அப்படி சொன்னார் என்று எனக்குத் தெரியும். ஆனால்'' என்கிறீர்கள். அதற்கு ''ஆனால்'' போன்ற எதுவுமே கிடையாது. அவர் இந்த விதமாக அதை உரைத்திருந்தால், அதுதான் அது. அவர் அதை மாற்றமுடியாது. அவரால் முடியாது, அவர் மாறாதவர், ''வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை, ஒருபோதும் தவறுவதில்லை'' என்று அவர் கூறியுள்ளார் (மாற் 13:31). அது அதன் காலத்தில் அங்கிருக்கும். அதை பிரகாசிக்கச் செய்ய யாராகிலும் ஒருவர் இருப்பார். அது உண்மை. இந்த குமாரன் அங்கிருப்பார் என்று தேவன் வார்த்தையை உரைத்தார். அதை பிரகாசிக்கச் செய்ய அவர் அங்கிருந்தார். பரலோகத்திலிருந்து நட்சத்திரம் விஜயம் செய்தது அவர்கள் அதை கவனித்துக் கொண்டே பின்பற்றி, அவரிடம் நேராக வந்தார்கள். அவர்கள் பழைய கோட்பாடுகளை விட்டு வெளியேறி, மறுபடியும் இயற்கைக்கு மேம்பட்டதை பின் தொடரத் தொடங்கினார்கள். அதை விட்டு வெளியேறினார்கள். அவர்கள் எவ்வளவாக களி கூர்ந்தார்கள்! ''அவர்கள் மறுபடியும் அந்த ஒளி தோன்றுவதைக் கண்டபோது மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்'' என்று வேதம் கூறுகின்றது. (மத்.2:10). 87ஓ, சகோதரனே, சகோதரியே, நீங்கள் ஒவ்வொருவரும் - நாம் ஒவ்வொருவரும், நானும் கூட - இங்குள்ள கிறிஸ்துமஸ் அலங்காரத்தையும், ஒருவர் மற்றவருக்கு அனுப்பும் கிறிஸ்துமஸ் வெகுமதிகளையும், இவ்வுலகின் அர்த்த மற்ற காரியங்களையும் ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு, நமது பெருமையை எடுத்து கீழே போட்டு, அதை காலின் கீழ் மிதித்து, ''கர்த்தராகிய இயேசுவே, அந்த பரிபூரண வெளிச்சத்துக்கு என்னை வழிநடத்தும்'' என்று கூறினால் எவ்வளவு நன்றாயிருக்கும்! அப்பொழுது இயற்கைக்கு மேம்பட்டது நடப்பதைக் காண்பீர்கள். பரிசுத்த ஆவியானவர் ஆச்சரியமான விதத்தில் வருவார். பாருங்கள்? 88அவர்கள் இயற்கைக்கு மேற்பட்டதை பின்தொடர்ந்து சென்றார்கள். அவர்கள் அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் அக்காலத்து பரலோக அடையாளத்தை பின் தொடர்ந்தார்கள். அது தேவனால் அளிக்கப்பட்ட பரலோக அடையாளம் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அது உண்மையென்று நீங்கள் எல்லோரும் நம்புகிறீர்களா? அது தேவனால் அருளப்பட்ட பரலோக அடையாளம். அவர்கள் வார்த்தை மாமிசமானவரைக் கண்டடையும் வரைக்கும் அந்த அடையாளத்தை பின் தொடர்ந்தார்கள். அவர் வார்த்தை மாமிசமானவர் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அக்காலத்துக்கென வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருந்த அடையாளம் அவர்களை வார்த்தை மாமிசமானவரிடம் வழிநடத்தியது. சகோதரனே, சகோதரியே, அவர் அதையே இன்றிரவும் செய்வார். நாம் பெற்றுள்ள பரலோகத்திலிருந்து வந்த இந்த மகத்தான அடையாளத்தை, நமது மத்தியில் வாசம் பண்ணும் பரிசுத்த ஆவியை, பின்பற்றுங்கள். “நான் அதை பெற்றுக் கொள்ளவேண்டுமென்று அறிகிறேன். ஒரு ஸ்தாபனத்தில் சேர்ந்திருப்பதைவிட அதிகம் செய்ய வேண்டுமென்று அறிகிறேன்'' என்னும் ஏதோ ஒன்று உங்கள் இருதயத்தில் அசைவாடிக் கொண்டிருக்கிறது. ''என் வியாபாரம் நன்றாக நடக்கிறது, அது விருத்தியடைகிறது என்று எனக்குத் தெரியும். ''சகோதரனே, என்றாவது ஒரு நாள் விடியற்காலை நான்கு மணிக்கு மாரடைப்பால் நீ மரிக்கக்கூடும், அப்பொழுது நீ உன் வியாபாரத்தை விட்டு செல்ல நேரிடும் என்று உனக்குத் தெரியுமா? அதன் பிறகு நீ எங்கே செல்லப் போகின்றாய்? 89(ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி) .... உன் மாமிசத்தில் அது உறுதிப்படுமானால், அப்பொழுது நீ பரிசுத்த ஆவியினால் பிறந்தவனாயிருப்பாய். அதை ஏற்றுக்கொள்ள நீ விரும்புவாய் அல்லவா? அது யாரும் பெறக்கூடிய மிகப்பெரிய கிறிஸ்துமஸ் வெகுமதியாய் இருக்கும் அல்லவா? நித்திய ஜீவன் என்னும் வெகுமதி. “தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்'' (யோவான் 3:16). ''கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு அவரைப் பணிந்து கொள்ள வந்திருக்கிறோம்.'' 90நாகரீகம் சூரியனுடனே கிழக்கிலிருந்து மேற்குக்கு பிரயாணம் செய்துள்ளது. நாம் மேற்கு கடற்கரையில் இப்பொழுது இருக்கிறோம். கிழக்கும் மேற்கும் சந்தித்து விட்டன. இதற்கு மேல் நம்மால் செல்ல முடியாது. மிகவும் பழமையான நாகரீகம் உலகின் மற்ற பாகத்திலுள்ள சீனா தேசம். ஞாபகம் கொள்ளுங்கள், அது போய் விட்டது.... பாவமும் நாகரீகம் கூட பிரயாணம் செய்துள்ளது. நாம். இதைக்கூறுவது கடினம் என்று எனக்குத்தெரியும். ஆனால், சகோதரனே, சகோதரியே, ஒரு மனிதனுடைய இருதயத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும், பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பெற்ற ஒரு மனிதன் பகுத்தறிய முடியும். மற்றவர்கள் பெற்றுள்ள அபிஷேகத்தை நீங்கள் கண்டிருக்கிறீர்கள். ஒரு மனிதனை நீங்கள் கவனித்து வாருங்கள். அவன் ஒரிரண்டு வார்த்தை பேசட்டும். அப்பொழுது வண்டுகள் அங்கு பறப்பதைக் காண்பீர்கள். அவை அவன் மேல் தங்கியுள்ள அபிஷேகத்தை கிரகித்துக் கொள்கின்றன. மனிதனின் ஒவ்வொரு சிந்தையும் பொல்லாததாகவே இருக்கின்றது - நோவாவின் நாட்களில் இருந்ததுபோல. மனிதனை உண்டாக்கினதற்காக தேவன் மனஸ்தாபப்பட்டார். ''மனுஷனை பூமியின் மேல் வைக்காமல் அவனை நிக்கிரகம் பண்ணுவேன்'' என்று அவர் கூறினார் (ஆதி. 6:7). நாம் மறுபடியும் அதே காலத்துக்கு திரும்ப வந்திருக்கிறோம். கவனியுங்கள். 91ஆயினும் அவர் எடுத்துக் கொள்ள விரும்புகிற ஒரு சிறு சபை அவருக்குண்டு. முதலாம் ஜாமம், இரண்டாம் ஜாமம் மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் ஜாமங்களில் நித்திரையடைந்து பூமிக்குள் படுத்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கானவர் அவருக்குண்டு. இது ஏழாம் ஜாமம். அவர் ஏழாம் ஜாமத்தில் தான் வருகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்த ஜாமத்தில் இவர் புத்தியுள்ள கன்னிகைகளையும், தங்கள் தீவட்டிகளில் எண்ணெய் இல்லாத கன்னிகைகளையும் கண்டார். எண்ணெய் பரிசுத்த ஆவிக்கு அடையாளமாயுள்ளது. இன்றிரவு உங்கள் தீவட்டிகளில் எண்ணெய் இல்லையென்று நீங்கள் காண்பீர்களானால், என் அருமை சகோதரனே, சகோதரியே, தேவனுடைய மகத்தான கிறிஸ்துமஸ் வெகுமதியை நீ ஏன் பெற்றுக்கொள்ளக் கூடாது? 92இன்று நாம் பெரிய வெகுமதியை வாங்குகிறோம், அதை தாளில் சுற்றுகிறோம். அதை சுற்றுவதற்காக மூன்று டாலர்கள் செலவழிக்கிறோம். அதன் மேல் எல்லாவிதமான அலங்காரமும் செய்கிறோம். அது ஒரு பெரிய வெகுமதியென்று நீங்கள் அநேகமுறை கருதுகின்றீர்கள். அன்றொரு நாள் இரண்டு பெண்கள் ஒரு அங்காடியில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருவள் தன் தந்தைக்கு வாங்கப் போவதாக சொன்னாள். அவள் தன் சகோதரியிடம், ''அப்பாவுக்கு என்ன வாங்கப் போகிறாய்?'' என்று கேட்டாள். அவள், ''ஒரு சீட்டுக் கட்டும், ஒரு பெட்டி சிகரெட்டுகளும் வாங்கப் போகிறேன்'' என்றாள். மற்றவள், ''நான் ஒரு சிறு குப்பி விஸ்கி வாங்கி அதை காகிதத்தால் சுற்றி அலங்கரிக்கப் போகிறேன்'' என்றாள். பாருங்கள், புறம்பேயுள்ள அலங்காரம் உள்ளே என்ன இருக்கிறது என்பதை தெரியப்படுத்துவதில்லை. பாருங்கள்? ஆனால் தேவனோ இன்றிரவு உங்களுக்காக ஒரு கிறிஸ்துமஸ் வெகுமதியை வைத்திருக்கிறார். அவர் அதை தொழுவத்தில் சுற்றி வைத்தார். அதன் வெளிப்புறம் ஒன்றும் பிரமாதமாக இல்லை. ஆனால், ஓ, உட்புறமோ நித்திய ஜீவன். இன்றிரவு இந்த அற்புதமான பரிசுத்த ஆவியானவர் உங்கள் வாழ்க்கையில் ஈடுபட்டு, உங்களை நித்திய வெளிச்சத்திற்கு வழிநடத்த அனுமதிப்பீர்களா? நாம் சற்று நேரம் தலைவணங்குவோம்: 93இந்த அமைதியான நேரத்தில், துண்டு துண்டாக அளிக்கப்பட்ட இந்த செய்தியை நான் கிறிஸ்துமஸ் செய்தி என்று அழைக்க முடியுமானால்; அநேக செய்திகளில் ஒன்று. இது சத்தியமென்று நீங்கள் உண்மையாக விசுவாசிப்பீர்களானால், அந்த நித்திய வெளிச்சத்தை நீங்கள் இதுவரை கண்டிராமல், மகத்தான பரிசுத்த ஆவியானவர் உங்களை அந்த வெளிச்சத்துக்கு நடத்த நீங்கள் அனுமதிக்காமல் இருந்திருப்பீர்களானால், உங்கள் இருதயத்தில், “கர்த்தராகிய இயேசுவே, அந்த வெளிச்சத்தைக் கண்டடைய விரும்புகிறேன். மற்றவர்கள் என்ன கூறினாலும் எனக்குக் கவலையில்லை, நான், நானே, நான் அந்த வெளிச்சத்தைக் கண்டடைய விரும்புகிறேன்'' என்று இப்பொழுது ஜெபிப்பீர்களா? நமது தலைகள் வணங்கியிருக்கும் இந்நேரத்தில் உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா? உங்கள் கரங்களை உயர்த்தி, ”சகோ. பிரான்ஹாமே, எனக்காக ஜெபியுங்கள். நான் உண்மையாகவே அந்த வெளிச்சத்தைக் கண்டடைய விரும்புகிறேன்'' என்று கூறுங்கள். பெண்ணே, கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக, பெண்ணே, கர்த்தர் உன்னையும் ஆசிர்வதிப்பாராக. ஐயா, கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. வேறு யாராகிலும், கையுயர்த்தி, ''எனக்கு வேண்டும், எனக்கு வேண்டும். எனக்கு தேவனுடைய கிறிஸ்துமஸ் வெகுமதி வேண்டும்'' என்று சொல்லுங்கள். ஐயா, கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. பெண்ணே, கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக. இன்னுமொருவர் கையுயர்த்தி, ''எனக்கு கிறிஸ்துமஸ் வெகுமதி வேண்டும். கர்த்தாவே, அதை என்னிடம் அனுப்பம். அது எப்படியிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. அது தொழுவத்தில் வந்தாலும், அது வைக்கோல் போரில் வந்தாலும், அது உலகத்துக்கு எவ்வளவு அவமானமாக காணப பட்டாலும், உலகத்தின் பார்வையில் நான் எவ்வளவு அவமானமாக காணப்பட வேண்டியதாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை'' என்று சொல்லுங்கள், தேவனுடைய வரங்கள் எப்பொழுதுமே மனிதனை விசித்திரமாக நடந்து கொள்ளச் செய்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? 94மோசேயைப் பாருங்கள், பெரிய வேத சாஸ்திர நிபுணன், படித்த மேதை. ஒருநாள் வனாந்தரத்தின் பின்பக்கத்தில் அவன் ஒரு ஒளியைச் சந்தித்தான். அவன் தன் பாதரட்சைகளைக் கழற்றிப் போட்டான். இடுப்பு வரைக்கும் தாடி தொங்கிக் கொண்டிருந்த எண்பது வயதான அந்த மனிதன், அவனுடைய மனைவியையும் குழந்தையையும் ஒரு கோவேறு கழுதையின் மேலேற்றி, எகிப்துக்குச் சென்றான். ஒருநாள் முழு சேனையுமே அவனுக்காக போரிட்டு ஜெயித்திருக்கும். ஆனால் அவனோ அதை செய்யவில்லை. அவன் கோணலான ஒரு தடியுடன், நாட்டைக் கைப்பற்ற, எகிப்துக்கு செல்கிறான். ஏன்? அவன் அந்த இயற்கைக்கு மேம்பட்ட ஒளியைக் கண்டு கொண்டான். 95இன்றிரவு உங்கள் இருதயத்தை உறுத்திக் கொண்டிருக்கும் அந்த சிறு காரியம், இந்நாளுக்கான இயற்கைக்கு மேம்பட்ட அந்த ஒளியே. அது உங்களை இயேசுவினிடம் வழிநடத்த அனுமதிப்பீர்களா? அவர் மாத்திரமே உங்களுக்கு ஜீவனையளிக்க முடியும். கையுயர்த்தாதவர் இன்னும் ஒருவர் இருப்பாரானால். நீங்கள், “சகோ. பிரான்ஹாமே, ஜெபத்தில் என்னை நினைவு கூருங்கள்'' என்று சொல்வீர்களா? கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக. இன்னுமொருவர்? உன்னை ஆசிர்வதிப்பாராக. வேறொருவர், வேறு யாராகிலும்? கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக. வாலிபனே, கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக. சிறுவனே, கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக. இன்னும் ஒருவர்? “நான் பின்பற்ற விரும்புகிறேன், நான் கிறிஸ்துவாகிய விடிவெள்ளி நட்சத்திரத்தை பின்பற்ற விரும்புகிறேன். நான் பின்பற்றி, இந்த நாளில் இயேசுவைக் கண்டடைய விரும்புகிறேன். இந்த கிறிஸ்துமஸ் அலங்காரம் அனைத்தினின்றும் நான் விலகிக் கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் ஒருநாள் இது அவியாத அக்கினியில் சுட்டெரிக்கப்படும்'' என்று கூறுங்கள். இதை சகித்துக் கொள்ளாத அனைவருமே அதனுடன் கூட எரிந்து போவார்கள். உலகம், பாவி, தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் உலகத்துடன் அழிந்து போவார்கள். உலகத்தில் அன்பு கொண்டுள்ள ஜனங்கள் உலகத்துடன் அழிந்து போவார்கள். உலகத்தின் மேல் அன்பு உங்களுக்கு இன்னமும் இருக்குமானால், இன்றிரவு உங்களை இயேசு கிறிஸ்துவுக்கும் அவருடைய வார்த்தைக்கும் முற்றிலுமாக விற்றுப்போட எண்ணினால், உங்கள் கையையுயர்த்துங்கள். கையை இதுவரைக்கும் உயர்த்தாதவர்கள். கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக. உன்னை ஆசிர்வதிப்பாராக. என்று கூறுகிறேன். பெண்ணே, கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக. 96உங்களுக்குத் தெரியாது, ஒரு நிமிடத்தில் வேறு யாராகிலும் தங்கள் கரங்களை உயர்த்தலாம். “சகோ. பிரான்ஹாமே. அது என்ன வித்தியாசத்தை உண்டு பண்ணுகிறது?” என்று கேட்கலாம். மரணத்துக்கு ஜீவனுக்கும் இடையேயுள்ள விசுவாசத்தை. அந்த கை இப்படி உயர்த்தப்பட்டு, அதை நீங்கள் உண்மையான அர்த்தத்தில் செய்திருந்தால், உங்களுக்கு அருகாமையில் ஏதோ ஒன்று இருக்கிறது. அது என்ன? அதுதான் நான் பேசிக்கொண்டிருக்கும் அந்த ஒளி. அந்த ஒளி தான், ''நான் தவறாக இருந்து வந்திருக்கிறேன். என்னில் உலகம் வாசமாயுள்ளது. அது இனிமேல் எனக்கு வேண்டாம். என் கைகளையுயர்த்துகிறேன்“ என்று நீங்கள் கூறும்படி செய்கிறது, அது ஒரு சாட்சி. நினைவில் கொள்ளுங்கள், உயர்த்தப்பட்ட கரம் எதைக் குறிக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? வானத்தின் கீழுள்ள ஒவ்வொரு மொழியாலும், உயர்த்தப்பட்ட கை சரணடைவதைக் குறிக்கின்றது. அது சரணடைவதற்கு அடையாளம். ஒரு சேனையில் அல்லது வேறெங்காவது நீங்கள் கைகளையுயர்த்தினால், சரணடைவதற்கு அது சர்வ தேச அடையாளம். இந்த கட்டிடத்திலுள்ள எத்தனைபேர் இன்றிரவு உங்கள் கரங்களை உயர்த்தி, ''கர்த்தாவே, நான் சரணடைந்து எல்லாவற்றையும் சமர்ப்பிக்கிறேன், நான் சரணடைகிறேன்'' என்று சொல்வீர்கள்? கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக, கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக. அது உண்மை. அது நல்லது. ஓ, என்னே. நாம் ஜெபித்துக் கொண்டிருக்கும்போது, பியானோ இசைப்பவர் பியானோவின் அருகில் வரும்படி கேட்டுக் கொள்கிறேன். 97பரலோகப் பிதாவே, “விசுவாசித்தவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள்'' என்று கூறப்பட்டுள்ளதென்று உணருகிறேன். அவ்வளவுதான் அவசியம், கர்த்தாவே. அவர்கள் உம்மை விசுவாசிப்பார்களானால், ஏதோ ஒன்று சம்பவித்தே ஆகவேண்டும். அவர்கள் உம்முடையவர்கள். அவர்கள் தேவனுடைய வார்த்தை அளிக்கப்பட்ட இந்த சிறு ஊழியத்தில் கிடைக்கப் பெற்ற விருதுகள். இன்றிரவு இங்கு, இந்த சிறு விருந்தில் குழுமியுள்ள அருமையான மக்களிடையே இயேசு கிறிஸ்துவின் பிரசன்னம் உள்ளது. இன்றிரவு நீர் இங்கேயிருக்கிறீர் என்று நாங்கள் அறிவோம். எங்கள் கண்களினால் ஒருக்கால் அதை நாங்கள் காணாமல் இருக்கலாம், ஆனால் மற்ற உணர்வுகளின் மூலம் அதை உணர்ந்தோம் - எங்கள் இருதயத்தின் உணர்வுகள், எங்கள் மனச்சாட்சி போன்றவைகளின் மூலம். எங்கள் ஆத்துமா எங்களுடன் பேசி, ''நாங்கள் இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தில் இருக்கிறோம்'' என்றது. அவரே மிகப்பெரிய கிறிஸ்துமஸ் வெகுமதி தேவனிடமிருந்து மனிதனுக்கு அளிக்கப்பட்ட உண்மையான முதல் கிறிஸ்துமஸ் வெகுமதி. நாங்கள் எல்லா வெகுமதிகளைப் பெற்றிருந்த போதிலும், எங்களில் அநேகர் இந்த மகத்தான வெகுமதியை இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் கரங்களை உயர்த்தியிருக்கும் போது, தேவனே, அவர்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம், எல்லாவற்றிற்கும் போதுமான இதை அவர்கள் விரும்புகின்றனர். பிதாவே அந்த வழியில் அவர்கள் சார்ந்து கொண்டார்கள். அந்த காலத்திலிருந்த அநேக ரபிக்களும், போதகர்களும் கூட அந்த வழியில் சார்ந்து கொண்டார்கள். ஆனால் அவர்கள் அடி எடுத்து வைத்து வெளியேறி, ஒரே ஒரு முறை தங்களை ஒப்புவித்து, அதை விசுவாசித்து, செய்தியை அந்த மணி நேரத்துக்கான வெளிச்சத்தை, உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தையை ஏற்றுக் கொள்ளப் பயந்தனர். அநேகர் அவ்வாறு செய்தனர். 98கர்த்தாவே, இன்றிரவு அநேகர் - இந்த சிறு குழுவில் இருபது அல்லது முப்பது பேர் உள்ளனர். எண்ணிக்கையை தான் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ கூறியிருந்தால், என்னை மன்னியும். ஆனால், தேவனாகிய கர்த்தாவே, ஏறக்குறைய அவ்வளவு பேர் தங்கள் கரங்களை உயர்த்தினர். அவர்கள் ஒப்பு கொடுக்க ஆயத்தமாயுள்ளனர். தேவனே. அவர்களுக்கு இயேசுவைத் தந்தருளும், அவர்களுடைய வாழ்க்கையில் அவர்களுக்கு பரிசுத்த ஆவியைத் தந்தருளும். அவர்களுடைய வாழ்க்கையில் இது மிகப் பெரிய மணி நேரமாக இருப்பதாக. இன்றிரவு அவர்கள் யோசேப்பைப் போல், ''நான் ஏன்“ கையுயர்த்தினேன்? அதை செய்யத் தூண்டியது எது? நான் எப்படி அதை செய்ய முன் வந்தேன்? அநேக ஆண்டுகளாக நான் கிறிஸ்தவன் என்று உரிமை பாராட்டி வந்தேன். ஆனால் ஏதோ ஒன்று என் கையை உயர்த்தும்படி என்னிடம் கூறினது'' என்று தங்கள் இருதயங்களில் ஆராய்ந்து கொண்டு வீடு திரும்புவார்களாக. சபை அங்கத்தினர்களும், ஊழியக்காரர்களும் தங்கள் கரங்களை உயர்த்துகிறார்கள், கர்த்தாவே! நீர் அவர்களுக்கு இந்த ஆசீர்வாதங்களை அளிக்கும்படி நான் ஜெபிக்கிறேன். இதை அளியும். இந்த ஆசிர்வாதத்தை அவர்களுக்கு அருளுமாறு ஜெபிக்கிறேன். அதை அருள்வீராக. கர்த்தருடைய தூதன் வந்து, “பயப்படாதிருங்கள், இதுவே இந்நாளுக்கான ஒளி. இதுவே இம்மணிநேரத்துக்கான வெளிச்சம். சாயங்கால வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. சூரியன் அஸ்தமிக்கும் முன்பு, சாயங்கால நேரத்தில் வெளிச்சம் உண்டாகும் என்று தீர்க்கதரிசி உரைத்துள்ளார்.'' என்று கூறட்டும். கர்த்தாவே, சூரியன் அஸ்தமிக்கும் காலத்தை நாங்கள் காண்கிறோம். விரைவில் அது நித்தியத்துடன் இணைந்துவிடும். கர்த்தாவே இவர்கள் ஒவ்வொருவரும் இன்றிரவு இயேசுவைக் காண அருள்புரியும். அவருடைய நாமத்தில் கேட்கிறேன். ஆமென். 99நாம் எழுந்து நிற்கும் போது, நம்மை ஒப்புக் கொடுத்ததன் அடையாளமாக இப்படி நமது கரங்களை உயர்த்துவோம். உங்களை ஒன்று கேட்கப் போகின்றேன். சற்று முன்பு உங்கள் கரங்களை உயர்த்தினவர்களே, உங்களுக்காக நான் ஜெபித்தேன். எனக்குத் தெரிந்ததெல்லாம் ஜெபம் செய்வது தான். உங்களுக்காக நான் விசுவாசிக்கப் போகின்றேன். நான் கேட்டுக் கொள்வதெதுவோ, அதை அவர்எனக்குத் தந்தருளுகிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஏனெனில் அவர் அவ்வாறு வாக்களித்துள்ளார். அவர் பொய் சொல்ல முடியாது. அவர் பொய் சொல்ல முடியாது. அது சம்பவிப்பதைத் தடுக்கும் ஒரே காரியம் - என் அவிசுவாசமே. நீங்கள் உண்மையாகவே அதை செய்தீர்கள் என்னும் அடிப்படையில், நான் உங்களுக்காக விசுவாசிக்கிறேன். தேவன் உங்களுக்கு பரிசுத்த ஆவியை அருளப்போகின்றார், அவர் அதை உங்களுக்கு அருளப்போகிறார், ஏனெனில் நீங்கள் அதை கேட்டீர்கள். நீங்கள் உங்களை ஒப்புக் கொடுக்க விரும்புகிறீர்கள். அப்படி நீங்கள் செய்திருந்தால், நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று கூறுகிறேன். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தில் விசுவாசம் கொண்டுள்ள ஒரு நல்ல சபையைத் தெரிந்து கொண்டு, அங்கு செல்லுங்கள். அங்கு செல்லுங்கள். அப்படிப்பட்ட ஒரு சபையில் நீங்கள் ஏற்கனவே இருந்தால், உங்கள் போதகரிடம் சென்று, ''அன்றொரு இரவு ஒரு சிறு கூட்டத்தில் என் கரங்களை உயர்த்தினேன்'' என்று கூறுங்கள். அது எந்த கூட்டம் என்று கூட நீங்கள் அவரிடம் கூற வேண்டியதில்லை. நீங்கள் அவரிடம், “என் கரங்களை உயர்த்தினேன். போதகரே, நீர் என்னுடன் கூட ஜெபிக்க விரும்புகிறேன். நான் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை நாடுகிறேன். அது எனக்குத் தேவை. இதை நான் பெற்றுக் கொள்ள வேண்டும். நான் ஜீவிப்பதற்கு அதை பெற்றுக் கொண்டே ஆக வேண்டும், அந்த வெளிச்சத்தை நான் பார்த்து விட்டேன்'' என்று கூறுங்கள். ஓ, தேவன் அதை உங்களுக்கு அருளுவாராக. இப்பொழுதே அதை செய்வீர்களா? 100இப்பொழுது இங்குள்ள ஒவ்வொருவரும்! நாம். ''எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், எல்லாவற்றையும், ஒப்புவிக்கிறேன் ஆசிர்வதிக்கப்பட்ட இரட்சகராகிய உமக்கே, எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன்'' என்னும் பாடலைப் பாடும்போது நமது கரங்களை உயர்த்தி, கண்களை மூடிப் பாடுவோம். எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், ஆசிர்வதிக்கப்பட்ட இரட்சகராகிய உமக்கே, எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன். எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன் , ஆசிர்வதிக்கப்பட்ட இரட்சகராகிய உமக்கே, எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன். நீங்கள் உண்மையாகவே அவ்வாறு கூறுகிறீர்களா? அப்படியானால் ''ஆமென்'' என்று சொல்லுங்கள். நீங்கள் இனிமையான ஒன்றை செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன். உங்கள் பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் ஒருவரிடம் கைகுலுக்கி, ''சகோதரனே, அதை உண்மையான அர்த்தத்தில் கூறினேன். எனக்காக ஜெபியுங்கள்'' என்று கூறுங்கள். அதை நாம் செய்வோம். நாம் எல்லாருமே. இப்பொழுதே அதை செய்வோம், (சகோ. பிரான்ஹாம் மேடையின் மேலுள்ள ஒருவரிடம், “சகோதரனே, அதை உண்மையான அர்த்தத்தில் கூறினேன். எனக்காக ஜெபியுங்கள். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. கர்த்தர் ஆசிர்வதிப்பாராக... எனக்காக'' என்கிறார் - ஆசி) அது நல்லது, அது அருமையானது. ஓ, அது உங்களுக்கு நல்லுணர்வைத் தருகிறதல்லவா? நான், உண்மையான அர்த்தத்தில் கூறினேன் என்பது. 101நாம் உண்மையாகவே நம் இருதயத்திலிருந்து, எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறோம் - நமது சுயசித்தத்தை, நமது சுய வழிகளை - நமக்குள்ள எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்கு ஒப்புவிக்கிறோம் என்று கூறியிருந்தால் நமது கரங்களை மறுபடியும் உயர்த்தி பாடுவோம்: எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், ஆசிர்வதிக்கப்பட்ட இரட்சகராகிய உமக்கே, எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன். இப்பொழுது நாம் தலைவணங்கி பாடுவோம். உங்கள் சிந்தையை அவரிடம் செலுத்துங்கள். நான்.... தேவன் தாமே தொளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கில் எழுந்த தமது நட்சத்திரத்தை அனுப்பி, உங்களை வார்த்தை மாமிசமானவரிடம் வழிநடத்துவராக என்னும் மிக்க மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், (தேவனிடம் கரங்களையுயர்த்துவோம்.) ஆசிர்வதிக்கப்பட்ட இரட்சகராகிய உமக்கே, நான்.... டோனி, கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.